Wednesday, 8 January 2014

சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று வேட்டி அணிந்து வர உத்தரவு

சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேட்டி அணிந்து அத்தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று ஒரு நாள் வேட்டி அணிந்து பணிக்கு வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை அடுத்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேட்டி அணிந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment