Friday, 21 February 2014

மலைப் பகுதி பள்ளிகளில் ஆன்-லைன் வழி வகுப்புகள்: முதல்வர் தொடங்கினார்

தொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக ஆன்-லைன் வழியாக வகுப்பு எடுக்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் திறமைமிக்க ஆசிரியர்கள் மாவட்ட வள மையத்திலிருந்தோ, தாங்கள் கற்பிக்கும் பள்ளிகளில் இருந்தோ தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு வகுப்புகளை எடுக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, இந்தத் திட்டத்தின்படி, 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.24 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 44,800 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக அரசு தரிவித்துள்ளது.

No comments:

Post a Comment