Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 28 March 2014

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது


தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்' என, தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. 60 ஆயிரம் ஆசிரியர்கள் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில், 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து, பாட வாரியாக, ஐந்து ஆசிரியர்கள் வீதம், 60 ஆயிரம் ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ஆசிரியர், நாள் ஒன்றுக்கு, 30 விடைத்தாள் திருத்துவார். அதன்படி, ஒரு நாளில், 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த முடியும். அதிகபட்சமாக, ஐந்து நாளுக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில், ஆசிரியர் பங்கேற்க இருப்பதால், தேர்தலுக்குப் பின், பணியை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து விடுவோம்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பாணி : வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் பணி, 15 அல்லது 20 நாள் என, இழுவையாக நடக்கும். ஆனால், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் பணியை, விரைந்து முடிக்க, அதிக ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தி, இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இதனால், தேர்வு முடிவும், விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது. தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், முன்னணி தனியார் பார்சல் நிறுவன வாகனங்களை, தேர்வுத்துறை ஈடுபடுத்தி வருகிறது. "கடந்த ஆண்டு, இந்த பணிக்காக, 2.8 கோடி ரூபாயை, அஞ்சல் துறைக்கு, தேர்வுத்துறை வழங்கியது. தற்போது, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த ஆண்டு செலவு குறையும்' என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment