Thursday, 10 April 2014

முடிந்தன பொதுத்தேர்வுகள்: தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும்

பள்ளி பொதுத்தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி, 20ம் தேதி வரை, 66 மையங்களில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால், இரு தேர்வுகளிலும், தேர்ச்சி, 90 சதவீதத்தை தாண்டும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.

தொடர்ந்து உயர்வு:




கடந்த இரு ஆண்டுகளாக, தேர்ச்சி சதவீதம் கணிசமாக எகிறி வருகிறது. 2012ல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 86.2 சதவீதமாக இருந்தது; இது, 2013ல், 89 சதவீதமாக உயர்ந்தது. பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம், 2012ல், 86.7 சதவீதமாகவும், 2013ல், 88.01 சதவீதமாகவும் உயர்ந்தது. பிளஸ் 2 தேர்வை விட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்தது.

No comments:

Post a Comment