Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 17 June 2014

490 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும்?


பள்ளிக்கல்வித்துறையில் 2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 19ம் தேதி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த 699 பேர் அடங்கிய சுழற்சி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 490 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளுக்கு தனியாக கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். பதவி உயர்வு பெற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment