Thursday, 5 June 2014

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று: பிழை சரிபார்க்க உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, பிழைகளற்ற வகையில் வினியோகிக்க, தேர்வுத்துறை அவகாசம் அளித்துள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 12ம் தேதி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்கூட்டியே பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்பி ஆசிரியர்களைக் கொண்டு, பிழைகளை சோதித்து சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிழை உள்ள சான்றிதழை, தேர்வுத்துறையில் சமர்பித்து, திருத்தம் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'பிழையை கவனிக்காமல், மதிப்பெண் பட்டியல் வினியோகித்தால், அந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment