Thursday, 7 August 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டியலை ஏன் வெளியிட வேண்டும்


முதலில் 10726 இடங்களுக்குப் பட்டியலைத் தயாரிக்க, இப்போது கூடுதலான 508 பணியிடங்களுக்கானதையும் சேர்த்து பட்டியல் தயாரிப்பதை விட ஒட்டு மொத்தமாக 15000 அல்லது 20000 நபர்கள்
வரையிலான பட்டியலை தயார் செய்துவிட்டால் போதுமே.

ஏனென்றால் அடுத்ததாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பள்ளிகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கும் போது இதுதானே சரியாக இருக்க முடியும்.
10726 பட்டியல் தயாரிக்கும் போது கூடுதல் 508 பேர் சேர்க்க இன்னும் ஒரு வார காலதாமதம். 11234 தயாராகி நிற்கும் போது கூடுதல் பணியிடம் இன்னும் 700 (உறுதி இல்லை) வரை கூடலாம், அப்போது அதற்கும் இன்னும் காலதாமதம் ஆகும். அது தயாரிக்கும் போது அடுத்து காலிப் பணியிடம் கூடுதலாகும். மீண்டும் ஒரு வாரம். ஆக, பட்டியல் வெளியாக இன்னும் ஒரு மாதம் கூட ஆகலாம்.

No comments:

Post a Comment