உலக மகளிர் தினத்தையொட்டி, 'தாவணி தினம்' கொண்டாடும்படி, கல்லூரி மாணவியருக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், வேண்டுகோள் விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி ?ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, அரசு அலுவலகங்களில், 'வேட்டி தினம்' கொண்டாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, உலக மகளிர் தினமான, மார்ச், 8ம் தேதி, 'தாவணி தினம்' கொண்டாட, கோ-ஆப்டெக்ஸ், முடிவு செய்துள்ளது.
இது குறித்து, சகாயம் கூறியதாவது:வேட்டி தினத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து, உலக மகளிர் தினம் வரை, ஏதேனும் ஒரு நாளை, தேர்வு செய்து, 'தாவணி தினம்' கொண்டாடும்படி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவியருக்கு, கோரிக்கை விடுத்துள்ளோம்.அன்றைய தினம், தாவணி அணிந்து வரும்படி கேட்டுள்ளோம். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு உள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment