Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 March 2014

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-க்குள் வெளியாகும் என தகவல்

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள் வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது.
சுமார் 15 நாட்களுக்குள் இந்தப் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு
ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
ஆனால், கடந்தாண்டு போன்றே மே 10ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.
26-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.

No comments:

Post a Comment