பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை முதற்பாடமாக எடுத்து படித்து, மாநில அளவில், முதல், மூன்று இடங்களை பிடிப்போர் பட்டியலில், நாமக்கல் மாவட்டம், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.2012: பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை, நாமக்கல் மாவட்ட மாணவர்கள், நான்கு பேர் பிடித்தனர்.
2013: பிளஸ் 2தேர்வில், 1,200க்கு, 1,189 மதிப்பெண் எடுத்து, நாமக்கல் மாவட்ட மாணவர் இருவர், முதலிடம் பிடித்தனர். இரண்டாம் இடத்தில், ஒரு மாணவர், மூன்றாம் இடத்தில் நான்கு பேர் என, ஏழு பேர், மாநில அளவில் இடம் பிடித்தனர்.இப்படி தொடர்ந்து சாதனை படைத்து வந்த நாமக்கல் மாவட்டத்தின் சுருதி, இந்த ஆண்டு குறைந்துள்ளது.இந்த ஆண்டு, மாநில அளவில், முதல் மூன்று இடங்களை நான்கு பேர் தான் பெற்றனர். முதல் இடம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும்; இரண்டாம் இடம், தர்மபுரிக்கும் சென்றது. மூன்றாம் இடத்தை, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்ட மாணவர் இருவர் தட்டிச் சென்றனர்.நாமக்கல் மாவட்ட மாணவர் துளசிராஜன் (1,191 மதிப்பெண்) கூட, இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிடையாது. இவர், சேலம் மாவட்டம், பெருமாள்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment