Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 8 June 2014

பள்ளி ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்: கல்வித் துறை உத்தரவு

அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில்தான் எழுத வேண்டும் என கல்வித் துறை உததரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி ஆசிரியர்கள் சிலர் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. அரசு ஆணையின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்.
எனவே, தொடக்கக் கல்வித் துறையின் கீழுள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில் எழுத மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடர்புடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment