Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 31 October 2013

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில்தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,
லஞ்சம் வாங்கிய கிளர்க்கைலஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று கைது செய்தனர்.

அக்டோபர்28 முதல்நவம்பர்2ம் தேதி வரைஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்அனைத்து அரசு ஊழியர்களும்ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர். இந்நிலையில்,தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்பில் செக்ஷனில்எழுத்தராக பணியாற்றி வருபவர் மோகன்ராம்50. இவர்தாரமங்கலம் யூனியன் வணிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின்பி.எஃப்.,மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வுஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்காண பில்களை பாஸ் செய்ய5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்துவணிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம்சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார்தலைமை ஆசிரியர் செல்வத்திடம்ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் மாலைதாரமங்கலம் ஏ.இ.ஓ.அலுவலகம் சென்ற தலைமை ஆசிரியர் செல்வம்ரசாயன பவுடர் தடவிய பணத்தைஎழுத்தர் மோகன்ராமிடம் வழங்கினார் . அப்போதுஅங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,சந்திரமௌலிஇன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார்,மோகன்ராமை கையும் களவுமாக பிடித்துகைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,மோகன்ராம் சிறையிலடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment