Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 March 2014

பாராளுமன்ற தேர்தல் எதிரொலியாக குரூப்–1, குரூப்–2 தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 26–ந் தேதி நடத்த இருந்த குரூப்–1 தேர்வை ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி நடத்த இருந்த குரூப்–2 ஏ தேர்வு, தேர்தல் காரணமாக ஜூன் 29–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்–1, குரூப்–2, குரூப்–2 ஏ, குரூப்–4 ஆகிய தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. குரூப்–2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வாகும்.
குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது தேர்தல் காரணமாக ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி குரூப்–2 ஏ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16–ந் தேதி நடைபெறுவதால், அதைத் தொடர்ந்து மே 18–ந் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப்–2 ஏ தேர்வு ஜூன் மாதம் 29–ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment