நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாகையில் ஜூன் 16-ல் தொடங்கப்படுகிறது என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2014-15-ம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாகை, அண்ணாசிலை அருகே உள்ள புனித அந்தோனியார் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஜூன் 16-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
ஜூன் 16-ம் தேதி காலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிமாறுதல் கோருவதற்கான கலந்தாய்வும் நடைபெறும்.
ஜூன் 17-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
ஜூன் 18-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.
ஜூன் 19-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 21-ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 23-ம் தேதி காலை தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், பிற்பகலில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
ஜூன் 24-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், ஜூன் 25-ல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
ஜூன் 26-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரும் கலந்தாய்வும், ஜூன் 28-ல் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் கலந்தாய்வும் நடைபெறும்.
இந்தக் கலந்தாய்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விலும், தேர்ந்தோர் பட்டியல்படி பதவி உயர்வுக்குத் தகுதிப் பெற்ற ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான கலந்தாய்விலும் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வு முடிவில் உரிய ஆணைகள் வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment