Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 9 September 2014

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கின் இடைகால தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும்?

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு.மா.வி.இரவிசந்திரன் அளித்த பேட்டியில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழாசிரியர்கள் சார்பில் தாட்சாயிணி ரெட்டி வாதிட்டார். அவரின் வாதத்தை கேட்ட நீதியரசர் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாக தெரிவித்தார்.
மேலும் இவ்வழக்கில் அண்மையில் மதிப்பிமிகு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபீதா அவர்கள் ஆஜராகி மாணவர் நலன் கருதி தீர்ப்பை உடனடியாக வழங்கிட உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment