Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 31 May 2014

பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை

பள்ளி திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி பேசியதாவது: பள்ளி திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்களான புத்தகம், நோட்டு ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற விலையில்லா பொருட்களான சீருடை, எழுது பொருட்கள் வழங்கப்படும். தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தகங்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பள்ளிகளிலும், மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியம் இருக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸை, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக இலவச பஸ் பாஸ் பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு, தாமதம் இன்றி பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, அனை வருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ரெங்கராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கண்ணையன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment