Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 30 June 2014

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்


ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295

வேதியியல் - 2667

விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்


ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

OC - 508

BC - 22172

BCM - 777

MBC - 11433
SC - 6353
SCA - 739
ST - 108

பிளஸ் 2 படிக்காமல் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியரான பெண்


பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி
தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் யூனியனுக்கு உட்பட்ட சின்னபேள கொண்டப்பள்ளி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுகுணா. 1985ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்ச்சி பெற்ற இவர், பிளஸ் 2 படிக்காமல் 1987ம்ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தார்.பின் இடைநிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்ட சுகுணா, ஓசூர் அடுத்த கெலமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.அதை தொடர்ந்து 1995ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இடமாறுதல் கவுன்சலிங் மூலம் ஓசூர் அருகே நல்லூர் டவுன் பஞ்சாயத்து துவக்கப்பள்ளிக்கு சென்றார்.அங்கிருந்து 2003ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, ஓசூர் அருகே உள்ள பூதினத்தம் துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஓசூரை அடுத்த அனுமந்தாபுரம் நடுநிலைப்பள்ளிக்கு சென்றார்.இந்நிலையில் முத்தாலி டவுன் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம்உயர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த ஆஞ்ஜநேயரெட்டி என்பவர் உயர்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். இதனால், தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த சுகுணா, அனுமந்தாபுரம் டவுன்பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளிக்கு ஆஞ்சநேயரெட்டிக்கு மாற்றப்பட்டார்.இதனால், ஆசிரியர் சுகுணா சின்னபேளகொண்டப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியலின்படி சுகுணாவுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு ஜூனியரான ஆசிரியர் சுரேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு விளக்கம் கேட்ட சுகுணாவிடம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெறாததால், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சுகுணா வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சிக்கு பின் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றதால், அதை பிளஸ் 2 மேல்நிலை கல்வியாக கருத வேண்டும் என கடந்த 24 ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் சுகுணாவுக்கு ஓசூர் குமுதேபள்ளி டவுன் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

டி.இ.ஓ. இன்று ஓய்வு கூடுதல் பொறுப்பை ஏற்க 20 தலைமையாசிரியர்கள் மறுப்பு


நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பிரபு ராதாகிருஷ்ணன் (58). இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.

மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் என்பது நேரடி நியமனம் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படுவதாகும். மாவட்ட கல்வி அலுவலரை பள்ளி கல்வித்துறை செயலாளர் நியமனம் செய்கிறார். தற்போது மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் எதுவும் இல்லை.

எனவே, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் சீனியர் தலைமை ஆசிரியருக்கு அந்த பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 20 சீனியர் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் வேண்டாம் என முதன்மைக் கல்வி அலுவலரிடம் எழுதி கொடுத்துவிட்டனர்.

இதனால், 3 சீனியர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக்தில் இருந்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 தலைமை ஆசிரியர்களின் பெயர் சென்னை சென்றுள்ளது.

இவர்கள் 3 பேரில் ஒருவருக்கு இன்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பை கூடுதலாக அளிக்க உள்ளது. அந்த தலைமை ஆசிரியர் யார்? என்பதை அறிய மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் பிரபு ராதாகிருஷ்ணன் இன்று மாலை 5 மணிக்கு பணியில் இருந்து ஓய்வுபெறும் போது, அவரிடம் புதிய டி.இ.ஓ பொறுப்புகளை பெறவேண்டும் என்பதால் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் சஸ்பென்ஸ்க்கு இன்று மாலை விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இங்கு, ஏழு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி இடைநின்ற குழந்தைகள் மீட்கப்பட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் படிப்பறிவு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் மாதத்துக்கு 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது.உண்டு உறைவிட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அவர்கள் மேல்நிலைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படுகிறது.எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மார்ச் மாதம் வரை உண்டு உறைவிட பள்ளிகளிலும், ஏப்ரல் மாதம் மட்டும், மாணவ, மாணவிகளின் ஊருக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு, மேல்நிலைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.

இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் உண்டு உறைவிட பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதியுதவி அளித்து வருகிறது. மேலும் தனியார் அமைப்புகளிடம் நன்கொடை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உண்டுஉறைவிட பள்ளி நடத்தும் தனியார் தன்னார்வ அமைப்புகள், அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீட்டு கல்வியறிவு வழங்க வேண்டும்.ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பல உண்டு உறைவிட பள்ளிகள், மற்ற யூனியனில் இருந்தும் குழந்தைகளை அழைத்து வருகின்றன. மேலும் உண்டு உறைவிட பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி அனைவருக்கு கல்வி இயக்கத்திடம் இருந்து முறைகேடாக பணம் வாங்கப்படுகிறது.அவ்வப்போது, மாணவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளிடம் மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை. மாணவன் ஊருக்கு சென்றுள்ளதாக கூறி உண்டு உறைவிட பள்ளி நிர்வாகம் பொய் சொல்லி வந்தது.

இந்நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் சசிகலா, கடந்த 16ம் தேதி இரவு முதல் 17ம் தேதி மாலை வரை முன் அறிவிப்பின்றி 19 உண்டு உறைவிட பள்ளிகளில் ஆய்வு செய்தார்.ஆய்வில், தன்னார்வ ஆசிரியர்கள் இல்லாமை, கழிப்பறை வசதி இன்மை, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் உரிமை பெறாதது, இடவசதி இன்மை, மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இன்மை, கட்டிட உரிமை சான்று இன்மை, போலீயான ரசீது பராமரிப்பு, உணவு பொருள் இருப்பு பதிவேடு இன்மை போன்ற பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.இதையடுத்து, இணை இயக்குனர் சசிகலா உத்தரவின் பேரில், ஓசூர் தளி அட்கோவில் உள்ள நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரம், பர்கூர் யூனியனில் உள்ள அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த உண்டு உறைவிட பள்ளி, என 16 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இந்த பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி யூனியனுக்கு உட்பட்ட கரியசந்திரம், கெலமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட தட்டகரை மற்றும் இருதுகோட்டை என மூன்று உண்டு உறைவிட பள்ளிகள் மட்டும் தற்காலிகமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.


மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்ததில், தமிழ், ஆங்கில பாடங்களில் மாணவர்கள் அதிகம் தோல்வியுற்றதும், ஒரு பாடத்தில் மாணவர்கள் தோல்வியும் அதிகரித்திருந்தது. ஒரு பாடம் தோல்வி மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் மூன்றாக உயர்ந்திருக்கும் என்பது தெரியவந்தது.இதன் விளைவாக வரும் அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியை இலக்காக கொண்டு, 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டத்தை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மீண்டும் துவக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும். மாணவர்களுக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும், ஆசிரியர்கள் நினைத்தால், அதை சரி செய்து அவர்களை நல்லமுறையில் படிக்க வைக்க முடியும்.சென்றாண்டு ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவரின் ஆசிரியர்கள் 150 பேரை அழைத்து விளக்கம் கேட்டேன்.'மாணவர்கள், ஆசிரியர்களின் பேச்சை கேட்பதில்லை' உட்பட பல்வேறு காரணங்களைகூறினர். இதையடுத்து, முதல் மாதாந்திர தேர்வில், தோல்வியுறும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.மேலும், 'நுாற்றுக்கு நுாறு' திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து எனக்கே நேரடியாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்றல் பணிகளை திட்டமிட வேண்டும். 

மாணவர்களை முழுமையாக கண்காணித்து, அவர்கள் பிரச்னை குறித்தும் ஆராய வேண்டும். பிளஸ் 2வை அடுத்து, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

District Transfer Online Counselling Website

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?


மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது. 

இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது. ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும். 

அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும். 

இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும். 

ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வு பற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப் படும். 

மத்திய காபினெட் இதுபற்றி முடிவு செய்து, செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும். 

இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும். 

மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும். 

மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது. 

மாநில அரசு ஊழியர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் 3 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 7% அல்லது 8% ஆக இருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்


பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு,
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், 'உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால், பலனில்லை' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும், 44 ஆயிரத்து 976 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உடற்கல்வி
ஆசிரியர் தரத்தில், 3,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். தவிர, 5,604 உயர்கல்வி பள்ளிகளிலும் சேர்த்து, உடற்கல்வி இயக்குனர் கிரேட் -2 என்ற தரத்தில், ௮6 ஆசிரியர்களும், 59௮6 மேல்நிலைப்பள்ளிகளில், உடற்கல்வி இயக்குனர் கிரேடு -1 என்ற தரத்தில், 320 ஆசிரியர்களே
உள்ளனர்.
இருப்பினும், அரசின் உத்தரவுப்படி, 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் இருத்தல் அவசியம். இந்த
கணக்கீடு படி, மாநிலம் முழுவதும், 10 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இது, நகர்புறங்களை காட்டிலும், கிராமப்புற பள்ளிகளில் அதிகம்.
தவிர, நடுநிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு, ஏழு ரூபாய், உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு 14 ரூபாய், மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு, 21 ரூபாய் வீதம், அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு தேவைக்கு,
ஆண்டுதோறும், அரசால் மானியத்தொகை ஒதுக்கப்பட வேண்டும். இந்த தொகைப்படி, உடற்கல்வி பயிற்சி மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக, நிதி ஒதுக்குவதில்லை.
இதனால், பெரும்பாலான துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அடிப்படை விளையாட்டுகளுக்கான கூட விதிமுறை தெரியாத நிலை நீடித்து வருகிறது.
மேலும், சில உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் என, மைதானத்தின் தேவை இருக்கும் விளையாட்டுகளில், போதிய மைதான வசதியில்லாததால், குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்
படுகிறது. இதனால், விளையாட்டில் ஆர்வமும், திறமையும் இருந்தும், பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில், பங்கேற்க கூட முடியாமல் போய் விடுகிறது.
இப்படி, விளையாட்டு துறை சம்மந்தப்பட்ட பிரச்னைகள் நீடிக்கும் சமயத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், டென்னி காய்ட் உள்பட 1௩ வகையான விளையாட்டுகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என, ஆணை பிறப்பித்திருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளால், குறிப்பிட்ட தரப்பு மாணவர்கள் மட்டுமே பலடைய முடியும் என்பது பலரது கருத்து.

கற்றுத்தருவது யார்?
மாநில உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க தலைவர் தேவசெல்வம் கூறுகையில், ''பள்ளிகளில் தற்போது, 13 வகை புதிய விளையாட்டுகளை, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளுக்கு, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனருக்கு பயிற்சி அளிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், நகர்புறங்களை சேர்ந்த, சில அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பலடைய முடியும். இந்த புது விளையாட்டுகளுக்கு, குறுகிய அளவிலான மைதானமே போதும் எனினும், கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. எனவே, குறைந்தபட்ச உடற்கல்வி ஆசிரியர் தேவையையாவது பூர்த்தி செய்தபின், இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்," என்றார்.

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு


இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வையணன். 2012ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் டி.எம். கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு பணி மூப்பு அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 2012-13ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்பட்ட 3 காலி பணியிடங்களில் ஒன்றில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் கலந்தாய்வில் காலி பணியிடம் காட்டப்படவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வையணன் வழக்கு தொடர்ந்தார். 

அப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பில், இனி வரும் காலங்களில் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தவும், விதிமுறைகளின்படி ஆசிரியர் வையணன் விண்ணப்பத்தை பரிசீலித்து இடமாற்றம் வழங்கவும் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நடந்த கலந்தாய்விலும் காலியிடங்கள் மறைக்கப்பட்டதால், ஐகோர்ட்டில் வையணன் மீண்டும் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை கடந்த 23ம் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமன், ‘’ ஜூன் 24ம் தேதி நடைபெறும் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தி மனுதாரரின் விருப்பத்தை பரீசீலிக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டார். 

இதன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த கலந்தாய்வில் வையணன் பங்கேற்றார். ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மறைக்கப்பட்டதால், வையணனுக்கு மாறுதல் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை கல்வித் துறை அவமதித்துள்ளதாக கூறி கடந்த 25ம் தேதி சென்னை ஐகார்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், கலந்தாய்வில் மறைக்கப்பட்டதாக கூறப்படும் 3 இடங்களில் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்காததால் மேற்கண்ட 3 இடங்களையும் நிரப்புவதை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல் நிலைக்கல்வி) ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு


திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.

கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் 10 மணிக்கு தொடங்க வேண்டிய கலந்தாய்வு இணையதள சர்வர் செயல்படாத காரணத்தால் பிற்பகல் வரை கலந்தாய்வு தொடங்கவில்லை. பிற்பகல் 2 மணிக்கு பிறகு தொடங்கிய கலந்தாய்வில் முதல் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் விட்டு பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு மட்டும் விரும்பிய மாறுதல் கிடைத்தது.

தொடர்ந்து சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் 7 பேருக்கு பணி இடமாறுதல் கிடைத்தது. இரவு 10 மணியை கடந்த நிலையில் இணையதள சர்வர் இயங்காததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேக்கம் ஏற்பட்டது.இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்தனர்.நள்ளிரவில் 2 மணிக்கு பிறகு கலந்தாய்வு சர்வர் செயல்படத் தொடங்கியதால் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தூக்கத்தை இழந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த கலந்தாய்வில் ஒருவருக்கு கூட வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. இணையதள சர்வர் சரிவர இயங்காத காரணத்தால் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு பல மணி நேரம் தாமதமாக

கலந்தாய்வில் குளறுபடி:

கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் காலி பணியிடங்கள், பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கலந்தாய்வில் முறையான நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

சுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன?


பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் அதனைக் கடன் வாங்கியாவது சமாளிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் ஊடகங்களில் விலாவாரியாக எழுதியாகிவிட்டது.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை, ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்களை நடத்துவது, பதினோறாம் வகுப்பில் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை நடத்துவது, அரசு விதிமுறைகளைப் புறக்கணிப்பது, தனிப் பயிற்சி என்ற பெயரால் காலையில் ஒன்பது மணிக்குப் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியரை இரவு ஒன்பது மணி வரை படிக்க வைப்பது, நல்ல மார்க் வாங்கும் மாணவர்களுக்கு ஒரு கவனிப்பு, சுமாரானவர்களுக்கு ஒரு கவனிப்பு என்று செயல்படுவது சமச்சீர் கல்வியைப் புறக்கணிப்பது என்று பல விஷயங்கள் பற்றி தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் விவாதங்கள் நடத்தியுள்ளார்கள்.

இன்றைக்கு நாம் பெறும் கல்வி வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்திய ஒன்று. ஆரம்ப காலத்தில் கல்விக்கான தேவை குறைவாகவே இருந்தது. வெள்ளைக்காரர்களது அரசாங்கத்தில் எழுத்தர் வேலைக்கு மட்டுமே அதிக தேவை இருந்தது. தொழில்துறை வளரவில்லை. எனவே குறைந்த அளவினரே படித்தனர். வேலைக்கும் சென்றனர்.

மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் அதிகம் பிரபலமாகவில்லை. வெள்ளை அரசாங்கம் ஒரு கல்வித் திட்டத்தை வகுத்து, அதற்கு உட்பட்டு பள்ளிகள் நடத்த தனியார் வசமே பொறுப்பினை ஒப்படைத்தது. இந்தக் கல்வியானது ஓரளவு வசதியுள்ள மேல் ஜாதியினருக்கு மட்டுமே கிடைப்பதாக இருந்தது. பெரும்பாலோர் படிக்காமலே இருந்தனர். காலம் மாறியது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கல்விக்கூடங்கள் அதிகரித்தன. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டிலும் காமராஜர் காலத்தில் கல்வியில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது. படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. எல்லா ஜாதியினரும் படிக்க முன் வந்தனர். அதனால் படிப்பவர்கள் எண்ணிக்கை பெருகியது. நிறைய பள்ளிக்கூடங்கள் தேவைப்பட்டன.

இப்பொழுது கல்வியில் இரண்டு பிரச்னைகள் உருவாயின. ஒன்று இவ்வளவு மாணவர்களுக்குக் கல்வி அளிக்க அரசு பள்ளிகளில் இடம் உண்டா என்பது. மற்றொன்று அப்படியே இடம் இருந்தாலும் அதற்குரிய கட்டமைப்புகளை எப்படி உருவாக்குவது என்பது!

இந்த இரு பிரச்னைகள் குறித்து அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. எனவே சந்தைப் பொருளாதார நிலைக்கு கல்வி தள்ளப்பட்டது. அரசால் சமாளிக்க முடியாத இந்தத் தேவையை தனியார்கள் சமாளிக்க முன்வந்தனர். இதனை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை. இது தானாகவே நடந்த ஒன்று. இதன் விளைவாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் தோன்றின; தோன்றிக் கொண்டிருக்கின்றன.

படிக்க முன்வரும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு இவை ஒரு வடிகாலாக அமைந்துள்ளன என்பது உண்மை. மேலும் படித்து வேலையின்றி இருக்கும் பல பட்டதாரிகளுக்கு இது ஓரளவிற்கு வேலை தரும் களமாகவும் உள்ளது. இங்கு தரம் பற்றிப் பேச வேண்டியதில்லை.

தேவை காரணமாக இந்தத் தனியார் பள்ளிகள் தோன்றின என்பது நிதர்சனமான உண்மை. இந்த யதார்த்தத்தினைப் புறக்கணித்துவிட்டு இப் பள்ளிகளின் செயல்கள் பற்றி விமர்சனம் செய்து கொண்டேயிருநதால் அது விமர்சனமாக மட்டுமே இருக்கும். அதனால் பலன் எதுவும் இருக்காது.

இந்தப் பள்ளிகள் தேவை. ஆனால் இவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? வேண்டும். இதற்கு நமக்கு முன் அனுபவம் உள்ளது. ஆரம்பத்தில் வெள்ளையர் அரசாங்கம் தனியார் வசமே கல்வியை ஒப்படைத்திருந்தது. ஆனால் பின்னர், அந்தக் கல்வி நிறுவனங்களை படிப்படியாக அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்கியது. பின்னர் அரசாங்கமே நேரடியாக பள்ளிகளைத் திறந்தது. இதனை காங்கிரஸ் அரசு விரிவாக்கியது. இப்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. அரசு மானியம் பெறும் பள்ளிகள், அரசின் பள்ளிகள் என்ற இரு வகைப் பள்ளிகள் இன்றும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை குறைவு.

இப்பொழுது சுய நிதிப் பள்ளிகளையும், இந்த மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன என்று யோசிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

அவ்வாறு செய்யும்பொழுதுதான் அரசின் ஆணைகள் அனைத்தையும், இந்தப் பள்ளிகள் நிறைவேற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க முடியும். பாடத்திட்டங்களை ஒரே சீராக வைத்திருக்கவும் முடியும். தரம் பற்றியும் பேச முடியும். சந்தைப் பண்டமாக மாற்றம் பெறும் கல்வியை அறிவு உலக விஷயமாக மாற்ற முடியும். சமுதாயத்தின் நன்மைக்காக இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

2013 - 2014ஆம் கல்வியாண்டில் 20500 காலிப் பணியிடங்கள்?


வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது. இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி முறை ,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான் சார்ந்துள்ளது. விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய் போய்விட்டது. AK 47 முதல் PK 57 வரை தொழிற்சாலையில் அவர்கள் எதை வேண்டுமானால் தயாரிக்கலாம்.ஆனால் மனிதன் உயிர் வாழத் தேவையான ஒரே ஒரு நெல் மணியைக் கூட அவர்களால் தயாரிக்க முடியாது. உலக மயமாக்கல் என்ற பெயரில் அயல் நாட்டு தொழிற்சாலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.அவர்கள் தேவையான அளவு நம்மை சுரண்டிவிட்டு தங்களது மூட்டை முடிச்சிகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.உதாரணம். சென்னையில் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை. சரி நம் துறைக்கு வருவோம்.2009 ஆண்டு ஒபாமா அமெரிக்காவின் அதிபரான போது அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல நடவடிக்கை எடுத்தாலும் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நடவடிக்கை அங்கு வேலை செய்த இந்தியர்களில் 50% இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். அமெரிக்காவின் பொருளாராதரத்தை சீர் செய்ய வேண்டுமானால் அமெரிக்க குடி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.இந்தியர்கள் பலர் அமெரிக்கா மக்களின் வேலையை பறித்து விடுகின்றனர் என்ற காராணம் சொல்லப் பட்டது .அதோடு இந்தியாவின் IT நகராமான பெங்களூருக்கு வழங்கி வந்த project இன் அளவு சரி பாதியாக குறைக்கப் பட்டது.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒபாமாவிற்கு அவரது நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தது.நாடு முன்னேற வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது . ஆனால் இந்தியாவிலோ அதற்கு நேர் தலைகீழ்.அரசியல்வாதிகள் தம் சொந்த நாட்டு மக்களை அடிமைகளாகவும் முட்டாள்களாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.நேருவிற்கு பிறகு பாராளுமன்றத்திலும், காமராஜருக்குப் பிறகு தமிழக சட்ட மன்றத்திலும் திறமையான அமைச்சர்களை நியமித்துக் கொள்வதில்லை. TET குறித்து இதுவரை நூற்றுக் கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து பதியப்பட்டும் வருகிறது.5% தளர்விற்கு எதிராக,சீனியாரிடிக்கு மதிப்பெண் அளிக்கப் படவேண்டும், +12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான முறை இதுதான் என நினைத்துக் கொண்டு வழக்குப் பதிகின்றனர். ஆனால் நிரப்படும் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாமலே வழக்கு பதிவு செய்வதுதான்உலக மகா காமெடி. ஒருவேளை அவர்கள் குறிப்பிடும் அதே முறை G.O வாக வந்தாலும் அவர்களது போட்டியாளர்கள் மாறுவார்களே தவிர, காலிப் பணியிடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 100% வேலை கிடைக்கும் எனற உத்தரவாதம் இல்லை. RTI மற்றும் இன்னும் பிற தகவல்களை ஒப்பிட்டு பார்க்கையில் படி BT க்கு 10800 பணியிடங்கள் நிரப்பப் போவதாக தெரிகிறது.ஆனால் இது அதிகாரப் பூர்வத் தகவல் இல்லை .ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் SC,ST பிரிவினரைத் தவிர பிற பிரிவினர்களும்,82-89 பெற்றவர்களும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். ஏனெனில் இந்த 10800 பணியிடங்களும் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பிரித்து வைக்கப் பட்டுள்ளதாகாவும்.அதில் SC,ST பிரிவினருக்கே அதிக காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? இப்போது நிரப்பப் போகும் இந்த 10,800 பணியிடங்கள் எப்படி வந்தது என்று கேட்டால், MAY 2013 ஆம் ஆண்டு வரை காலிப் பணியிடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் அதில் மொத்தமுள்ள 30,800 பணியிடங்களில் 20,000 பணியிடங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கி விட்டதாகவும் மீதமுள்ள 10,800 பணியிடங்கள் 2013 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நம்மைக் கொண்டு நிரப்பப் போவதாகவும் தெரிகிறது. 2012 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2013-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பினால் 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற நமக்கு 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களைக் கணக்கில் எடுதுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும்.வரும் ஜூலை 10 முதல் சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது.அப்போது கல்வி மானியக் கோரிக்கையின் போது உண்மை நிலவரம் தெரிந்து விடும். உண்மையில் அரசும் TET 2013 தேர்வு முடிவு வெளியானது முதல் இந்நாள் வரை ஏற்பட்ட குழப்பத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாகவும்,82-89 பெற்றவர்களும் உண்மையாக பயனடைய வேண்டும் என்று நினைத்தால் 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களையும் கணக்கில் சேர்த்து TET-2013 க்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. ஒருவேளை 10800 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமானால் அதிலுள்ள அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வழக்குத் தொடுக்கும் அன்பர்களே, இதுதான் நமக்கு சாதகமான weighatge முறை என நினைத்துக் கொண்டு,தான் குறிப்பிடும் முறையிலேயே weighatge முறை கணக்கிட வேண்டும் என வழக்குத் தொடராமல், TET- 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2013 வரையுள்ள காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டு நிரப்பப் படும் போது TET-2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2014 வரை உள்ள காலிப் பணியிடங்களும் கணக்கில் எடுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடருங்கள். 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 20500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது .ஆதலால் நாம் அனைவரும் பயனடையலாம்.

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்


தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்...
=========================================================
திருவண்ணாமலை மாவட்டம் 
*********************************************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி, 
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை

ஈரோடு மாவட்டம் 
*****************************
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
ஈரோடு

விருதுநகர் மாவட்டம்
*********************************
கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர்

காஞ்சிபுரம் மாவட்டம் 
*******************************
ராணி அண்ணாதுரை பள்ளி, காஞ்சிபுரம்

தஞ்சாவூர் மாவட்டம் 
*******************************
DPC , SSA அலுவலகம், தஞ்சாவூர்

திருப்பூர் மாவட்டம் 
***************************
Jaivaabhai School,Thirupur.

கரூர் மாவட்டம் 
*************************
MORNING STAR AIDEAD SCHOOL, கரூர்

கோவை மாவட்டம் 
*****************************
மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ராஜா வீதி 
கோவை.

நாகப்பட்டினம் மாவட்டம் 
************************************
நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி 
- நாகப்பட்டினம்

வேலூர் மாவட்டம் 
***************************
HOLY CROSS HIGHER SEC . SCHOOL, சத்துவாச்சாரி, வேலூர்

புதுக்கோட்டை மாவட்டம்
************************************
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,பிரகதாம்பாள் பள்ளி வளாகம்,பழைய பேருந்து நிலையம் அருகில்,புதுக்கோட்டை.

சேலம் மாவட்டம்.
**************************
சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,4 ரோடு,சேலம்

மதுரை மாவட்டம்.
****************************
இளங்கோ மேல்நிலைப் பள்ளி, அண்ணா பேருந்து நிலையம் 
அருகில், மதுரை.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் .


1.வாணக்கன்காடு PUMS
2.கிருஷ்ணம்பட்டி PUMS
3.அதிரான் விடுதி PUES
4.குலப்பென்பட்டி PUMS
5.ராசாக்குடியிறுப்பு PUES
6.தெக்கிக்காடு PUMS
7.தெக்கிக்காடு PUMS
8.குறும்பிவயல் PUMS
9.வெள்ளாளவிடுதி PUMS
10.மேலப்பட்டி PUES
11.கருக்காக்குறிச்சி PUMS
12.முத்தானபட்டி PUES
13.கிளாங்காடு PUES
14.சொக்கம்பேட்டை PUES
15.புதுக்கோட்டை விடுதி PUMS
16.விளாரிப்பட்டி PUES
17.சூரியன் விடுதி PUES
18.மைலன்கோன்பட்டி PUMS
19.ராங்கியன்விடுதி புதியது PUMS
20.ராங்கியன்விடுதி பழையது PUES
21.ஒடப்பவிடுதி PUMS
22.ஒடப்பவிடுதி PUMS
23.குளந்திரான்பட்டு PUMS
24.சாஞ்சாடிதெருPUES
25.பாப்பாப்பட்டி PUMS

Sunday 29 June 2014

5 ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடம் MAN VERSUS NATURE - AUDIO LESSON

5 ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடம் MAN VERSUS NATURE - AUDIO LESSON

சரியான உச்சரிப்புடன் ஆசிரியர்கள் கற்பிக்கவும், இதை

 பன்முறைக்கேட்டு மாணவர்கள் பயிற்சி பெறவும், சரியான ஒலிப்புடன் 

வாசிக்கவும் இந்த AUDIO LESSON பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

பாடத்தை கேட்கவும், பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள LINK ஐ CLICK 

செய்யவும்

டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம்!!


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி


மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.