Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 25 March 2014

குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது


குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு சென்னையில் திங்கள் கிழமை தொடங்கியது.

தமிழக அரசு பணியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவி களில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவு மார்ச் 5-ம் தேதி வெளியானது.

தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த 12 லட்சம் பேரின் மதிப்பெண் அடங்கிய ரேங்க் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிட்டது. அதோடு காலியிடங் களின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்கட் டமாக, இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு மார்ச் 24-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் திங்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. மே 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் 6 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment