Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 31 March 2014

3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 800 பேர் மாயமாகி உள்ளனர். இப்பட்டியலில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் 2,413 பேர் காணாமல் போய் உள்ளனர். அந்த வரிசையில், நடப்பு ஆண்டில் மார்ச் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 800 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என காவல்துறையில் புகார்கள் பெறப்பட்டு உள்ளன.
இப்பட்டியலில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 202 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவியர். குடும்ப பிரச்னைகளால், ஏழு பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
மதுரை, 46, வேலூர், 37, காஞ்சிபுரம், 35, சேலம், 28, தேனி, 26, தஞ்சை, 22, நெல்லை, 21, விழுப்பும், 18, விருதுநகர், 17, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், போட்டோக்களுடன், காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment