Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 March 2014

ஓட்டுப்பதிவு நாளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

லோக்சபா தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு, ஓட்டுப்பதிவு நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடக்கிறது. ஏப்ரல், 7ல் துவங்கி, மே மாதம், 12 வரை, தேர்தல் நடக்கிறது. இதில், தமிழகத்தில், அடுத்த மாதம், 24ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. அந்த நாளில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படும். இந்நிலையில், மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில், அடங்கியுள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ஓட்டுப்பதிவு நாளன்று மூடப்பட்டிருக்கும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு அன்று விடுமுறை தினமாகும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment