Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 31 October 2013

கலை ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல்

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு

7,8 ஆம் வகுப்பு மாணவியருக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை

10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விவரம் பதிய கால அவகாசம் நீட்டிப்பு

டி.இ.ஒ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதில்லை - தலைமை ஆசிரியர்கள் முடிவு

4 பேர் முக்கியமா? 7 லட்சம் பேர் முக்கியமா? குரூப் 2 தேர்வில் தேர்வாணையம் முடிவு

கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் - அசத்திய பிளஸ் 1 மாணவன்

முதுகலை ஆசிரியர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு


தனி ஊதியம் ரூ.5,000 வேண்டும் - சி.இ.ஒ., டி.இ.ஒ. வினர் கோரிக்கை


சிறுபான்மை பள்ளிகளுக்கு தனி சலுகையா? கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கோரிக்கை


'ஆல் பாஸ்' ஆக தனி புத்தகம் - பள்ளி கல்வி துறை அதிரடி


குத்து மதிப்பாக மார்க் போடுகிறோம் - தினமலர் செய்தி


மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை:

திருச்சி மாவட்ட பள்ளிகளை  மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும். கழிப்பறைகளில் தண்ணீர் குழாய் வசதி இல்லையெனில் வாளிகளில் தண்ணீர் நிரப்பி இருக்க வேண்டும். பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் கழிப்பறைகளை பயன் படுத்த வேண்டும். கழிப்பறைகள் பழுது நிலையில் இருந்தாலோ அல்லது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ, குடிநீர் வசதி இல்லாமல் இருந்தாலோ அப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
 ""கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற  விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி - கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு, எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள்


பள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் 100 சதவீத தேர்ச்சி கேள்விக்குறியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை அடைய கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பள்ளிகளில் பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை இப்பணியிடங்களுக்கு நியமிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் ஏற்கனவே அதிக ஆசிரியர்கள் இருக்கும் பாடங்களுக்கே தற்காலிக ஆசிரியர்கள் சில பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக, கணிதம், ஆங்கிலம் போன்ற கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் தமிழ், பொருளாதாரம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பள்ளிகளில் கடின பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் 100 சதவீத தேர்ச்சி என்பது கேள்விக்குறியாகும். 
மேலும், ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் கூடுதல் பணியாக தற்காலிக ஆசிரியராக சில பள்ளிகளில் நியமனம் பெற்றுள்ளனர். இதனால் ஒரே ஆசிரியர் இரு சம்பளத்தை தலைமை ஆசிரியர்கள் உதவியுடன் பெறும் ‹ழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பள்ளி வாரியாக இதனை ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை செய்து பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், கடினமான பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும், இதில் தொடர்ந்து குளறுபடிகளை செய்து வரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி கிடைக்கும்.

1000 பள்ளிகள் மீது நடவடிக்கை


தமிழகத்தில் செயல் படும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டண கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 2010 முதல் அந்த கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது. 2013 முதல் 2016 வரைக்கான கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கட்டண கமிட்டி பள்ளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் நேற்று கட்டண கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாயிலில் அமர்ந்து கோஷமிட்டனர்.  இதனால் நேற்று காலை டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டண கமிட்டி தலைவர் நீதிபதி சிங்காரவேலு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் போது ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை கட்டண கமிட்டி குறைக்கிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளிக்கான கட்டணத்தை,  ஆசிரியர்களின் சம்பளம் பாதிக்காத வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது; தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்க விசாரணை நடக்கிறது. இதுவரை 10,780 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் 35 பள்ளிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100 ஆசிரியைகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதை கமிட்டி பரிசீலனை செய்யும். மேலும், பள்ளி நிர்வாகம் கமிட்டியிடம் கொடுக்கும் வரவு செலவு பட்டியலின் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம். எந்த பள்ளியின் மீதும் விருப்பு வெறுப்பு கிடை யாது. எனவே ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில் லை. தற்போது நடக்கும் விசாரணையில் 1000 பள்ளிகள் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இதுவரை 3 சம்மன்கள் அனுப்பி விட்டோம். அந்த பள்ளிகள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த பள்ளிகள் இயங்குகிறதா, அங்கீகாரம் வாங்கியுள்ளார்களா, அங்கீகாரம் புதுப்பிக்கவில்லையா என்றும் கேட்டுள்ளோம். அதற்கான விளக்கம் கிடைத்ததும் அந்த பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படும். 
இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார். 

மனநல ஆலோசகர்களை நியமிக்க கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

 "மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப" மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை வக்கீல் ஞானகுருநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனர் 2011 மே 25 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், "கல்லூரி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், தவறுகள் செய்ய நேர்கிறது. இதனால் தண்டனைக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதை தடுக்க ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதிக விடுப்பு எடுக்கும் மாணவர்களை கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டும்.குறைந்தபட்ச வருகைப்பதிவு இல்லாவிடில், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு மாணவர்களுடன் இணக்கமாக பேசி தீர்வு காண மூத்த பேராசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடியில் ஒரு தனியார் கல்லூரி முதல்வரை கொலை செய்துள்ளனர். 535 பொறியியல் கல்லூரிகளில் 120 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, திறனை மேம்படுத்த நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.ஒரு பி.டெக்., மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தடுக்க தேர்வுக்கு முன்னும், பின்னும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த மனநல ஆலோசகர்களை நியமிக்க ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் 2008-09ல் துவக்கப்படும், என அரசு அறிவித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை.அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதிகள் வி.தனபாலன், ஜி.சொக்கலிங்கம் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் வக்கீல் சாமிதுரை ஆஜரானார். உயர்கல்வி செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது "அம்மா உணவகம்' - தினமலர் செய்தி


இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,

வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும்,  இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதிமொழி மற்றும் நிறைவு சான்று

EMIS பணிகளை 30.10.2013 க்குள் முடிக்க உத்தரவு

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்

OFF-LINE இல் EMIS பதிவேற்றம் செய்வது எப்படி? வீடியோ விளக்கம்

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில்தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,
லஞ்சம் வாங்கிய கிளர்க்கைலஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று கைது செய்தனர்.

அக்டோபர்28 முதல்நவம்பர்2ம் தேதி வரைஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்அனைத்து அரசு ஊழியர்களும்ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர். இந்நிலையில்,தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்பில் செக்ஷனில்எழுத்தராக பணியாற்றி வருபவர் மோகன்ராம்50. இவர்தாரமங்கலம் யூனியன் வணிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின்பி.எஃப்.,மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வுஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்காண பில்களை பாஸ் செய்ய5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்துவணிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம்சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார்தலைமை ஆசிரியர் செல்வத்திடம்ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் மாலைதாரமங்கலம் ஏ.இ.ஓ.அலுவலகம் சென்ற தலைமை ஆசிரியர் செல்வம்ரசாயன பவுடர் தடவிய பணத்தைஎழுத்தர் மோகன்ராமிடம் வழங்கினார் . அப்போதுஅங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,சந்திரமௌலிஇன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார்,மோகன்ராமை கையும் களவுமாக பிடித்துகைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,மோகன்ராம் சிறையிலடைக்கப்பட்டார்.

இரட்டைப்பட்டம் இன்று (31.10.2013) வரிசை எண் 36 ல் விசாரணைக்கு வருகிறது

இன்று  (31.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 36-ல் விசாரணைக்கு வருகிறது.

திருச்சி காஜாமலையைச்சேர்ந்த மாணவி சுல்தானா மரணம் குறித்த வழக்குகள் மாநில குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றம் சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த மாணவி சுல்தானா மரணம் குறித்து, பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும், மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று, சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
உறுப்பினர் கோரிக்கை-ஜெயலலிதா விளக்கம்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-
முதல் துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய உறுப்பினர் ஜவருல்லா, திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி தவுபிக் சுல்தானா என்ற மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காகி அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ரெயில்வே இருப்புப்பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது என்றும், அந்த வழக்கை தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என்றும், விரைவிலே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மாணவி சுல்தானா
திருச்சி, காஜாமலை பகுதியைச்சேர்ந்த அக்பர் பாட்சா என்பவரின் மகள் தவுபிக் சுல்தானா மேலப்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த 13.08.2013 அன்று பள்ளிக்கு சென்ற சுல்தானா, மாலையில் வீடு திரும்பவில்லையென, அவரது உறவினர் ஜமாலுதீன் என்பவர் 14.08.2013 அன்று அளித்த புகாரின் பேரில், பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் காணாமல் போன தவுபிக் சுல்தானா ரெட்டைமலை ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இறந்து கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருச்சி ரெயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவ்வழக்கு எடமலைபட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இறப்பில் சந்தேகம்
சுல்தானாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எதிரிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கோரி, த.மு.மு.க. உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்து 15.08.2013 அன்று 16.08.2013 ஆகிய தேதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குற்றப்புலனாய்வு துறை விசாரணை
பின்னர், சுல்தானா குறித்து பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் 30.08.2013 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி வழக்கப்படி வீட்டிற்கு செல்லாமல் ரெயில் பாதையில் நடந்து செல்வதை பல சாட்சிகள் கண்டுள்ளனர். புகைவண்டியில் இப்பெண் அடிப்பட்டதற்கான அறிகுறிகள் பிரேத பரிசோதனையில் காணப்பட்டுள்ளன. இது விபத்து காரணமாக ஏற்பட்டதா அல்லது தற்கொலையா அல்லது வன்முறையினால் நடைபெற்ற மரணமா என்பது புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இரவு 10 மணிக்கு மேல் சத்தம் கூடாது பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு


 திருச்சி மாவட்டத்தில் குடிசை பகுதிகளில் ராக்கெட் வெடி வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வெடியினால் ஏற்படும் தீய விளைவுகளை அனை வரும் உணர வேண் டும். 125 டெசிபல் அளவு க்கு மேல் ஓசை ஏற்படுத் தும் வெடிகளை வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடங்களில் வெடிகள் வெடிக்க வேண் டாம். மருத்துவமனை, பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமை தியான பகுதிகளில் வெடி களை வெடிக்க கூடாது. ஒளி மற் றும் வண்ணம் ஏற்படுத்தும் மத்தாப்புகளை வெடிக்கலாம். குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொரு ட்கள் இருக்கும் இடங்களில் ராக்கெட் வெடிகள் வெடிக்க கூடாது. வெடி வெடிக்கும்போது, தீக்கா யம் ஏற்பட்டால் முத லில் அதிக தண்ணீரை காயத் தின் மேல் ஊற்றவும், கண் ணில் ஏற்படும் காயங்களுக்கு நிறைய தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு குறையாமல் கழுவ வேண் டும். பின்னர் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். ஒலி மாசு ஏற்படுத்துகின்ற பட்டாசு களை தவிர்த்து, வண்ண மிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசு களை மட்டும் உபயோகித்து வழக்கமான உற்சாகத்து டன் தீபாவ ளியை கொண்டாடி சுற்றுசூழலை பாது காக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியன்று செல்போனில் பூஸ்டர் சலுகை கிடையாது - பிஎஸ்என்எல் அறிவிப்பு

 தீபாவளியன்று மட்டும் பூஸ்டர், ரேட்கட்டர் சலுகைகள் கிடையாது. அதனால் அன்று  செலபோனில் பேசினால், எஸ்எம்எஸ் அனுப்பினால் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. செல்போன் இணைப்பு பெறும்போது பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை பூஸ்டர், ரேட்கட்டர் சேவைகள் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.  அதேபோல் இலவசமாக பேசிக்கொள்ளும், எஸ்எம்எஸ் அனுப்பும் பூஸ்டர் சலுகைகளும் உள்ளன. அதற்கு சேவைகளுக்கும் சலுகைகளுக்கும் ஏற்ப தனியே கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சலுகைகளுக்கு தீபாவளி, புத்தாண்டு என விழாக்காலங்களில் தடை விதித்து விடுகின்றன செல்போன் நிறுவனங்கள். அதன் மூலம் அதிக வருவாயை செல்போன் நிறுவனங்கள் பெறுகின்றன. அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியன்று பூஸ்டர், ரேட்கட்டர் சலுகைகள் செல்லுபடியாகாது என்றும், அன்று பேசுபவர்களுக்கு, எஸ்எம்எஸ் அனுப்புபவர்களுக்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது. மேலும் தகவல் அறிய 1503 என்ற உதவி மைய எண்ணை தொடர்புக்கு கொள்ளலாம். சில செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற எந்த தகவலையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பாமல், பூஸ்டர் கட்டணங்களை விழாக்காலங்களில் ரத்து செய்து வருவாய் பார்க்கின்றன.

வவ்வால்களுக்காக பல ஆண்டாக அதிக சத்தம் எழுப்பாத வெடிகளை வெடிக்கும் கிராமம்

காஞ்சிபுரம் அருகே பசுமையான கிராமம் விஷார். இக்கிராம மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தேயே நம்பியுள்ளனர். இங்குள்ள தாமரைகுளம் அருகில் பீமமேஸ்வரர் கோயில் உள்ளது. இதனருகில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இதில் 1000த்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன. இவைகள் இரவில் பலஇடங்களில் இரைதேடிவிட்டு இந்த மரத்துக்கு வந்துவிடும். வவ்வால்களுக்கு இடையூறு செய்யாத வகையில் இக்கிராம மக்கள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிப்பதில்லை. மத்தாப்பூ போன்ற சத்தம் வராத வெடிகளையே வெடிக்கின்றனர். இந்த வழக்கத்தை 150 ஆண்டாக கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் நாகேந்திரன், பிரசாந்த்திடம் கேட்டபோது, ‘குழந்தை பருவத்தில் இருந்தே மரத்தில் இருக்கும் வவ்வால்களை பார்த்து வருகிறோம். விளையாட்டுக்குகூட வவ்வால்கள் மீது கற்களை எடுத்து எறிவதில்லை’ என்றனர். முருகன், சண்முகம் கூறுகையில், ‘இந்த ஆலமரம் 200 ஆண்டுக்கும் மேலாக இருப்பதாக கூறுகின்றனர். 3 மரங்களில் 2 மரங்கள் விழுந்துவிட்டன. தற்போது இந்த மரம் மட்டும்தான் உள்ளது. வவ்வால்களுக்காக அதிக சத்தம்  உள்ள பட்டாசு வெடிக்காத வழக்கத்தை பல ஆண்டாக கடைபிடித்து வருகிறோம்’ என்றனர்.

டிச.1ல் குரூப்,2 எழுத்து தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்


குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் தேதி நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் காலியாக உள்ள 1064 அரசு பணிகளில் புதிய அலுவலர்களை நியமிக்க குரூப் 2 தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே தேதி அறிவித்தது. முதல் நிலை எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குரூப் 2 தேர்வு நடக்கும் நாளான டிசம்பர் 1ம் தேதி, வேறு சில துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் நடக்க உள்ளது என்றும், அதனால் குரூப்2 க்கான முதல் நிலைத் தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என்று குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகயை தேர்வாணையம் பரிசீலித்தது. குரூப் 2 தேர்வு எழுத 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வுகள் நடக்க இருப்பதால் குரூப் 2 தேர்வை விரைந்து முடித்து முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. அதனால் தேர்வாணையம் அறிவித்தபடி டிசம்பர் 1ம் தேதியே குரூப் 2 தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை மாஜி துணைவேந்தர் மன்னர் ஜவகர் சஸ்பெண்ட்! : ஓய்வு பெறுவதற்கு முன், அரசு அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், மன்னர் ஜவகர், பேராசிரியர் பணியில் இருந்து, இன்று ஓய்வு பெறும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, அதிரடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த, 2008 முதல், 2011 வரை, சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தராக, மன்னர் ஜவகர், பதவி வகித்தார். அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், துணைவேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பல்கலையின், வேலை வாய்ப்பு மைய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பணியில் இருந்து, இன்று, ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மன்னர் ஜவகர், சஸ்பெண்ட் செய்ததற்கான கடிதம், அவரது வீட்டில் வழங்கப்பட்டது. உங்கள் மீது, பல்வேறு புகார்கள் உள்ளன. அது தொடர்பாக, விரைவில், விசாரணை நடத்த இருப்பதால், பணியில் இருந்து, உங்களை சஸ்பெண்ட் செய்கிறோம் என, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஓய்வுபெறும் நிலையில், திடீரென, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை அறிந்து, மன்னர் ஜவகர், அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து, அவர் கூறுகையில், நான், எந்த தவறும் செய்யவில்லை. எல்லாவற்றையும், இறைவன் பார்த்துக் கொள்வான். எனினும், ஓய்வுபெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, எனக்கு, கடும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

காரணம் என்ன? : அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நடந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா பல்கலையில் நடந்த பல முறைகேடு குறித்து, சட்டசபையில், உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா பல்கலையில், முறைகேடாக, 300 மாணவர், கூடுதலாக சேர்க்கப்பட்டனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன என, பழனியப்பன் தெரிவித்தார். விதிமுறைக்கு மாறாக, ஏராளமான மாணவர்கள், அண்ணா பல்கலையில் சேர்க்கப்பட்டதற்கு, மன்னர் ஜவகர் தான் காரணம் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இரண்டாவதாக, பல்கலைக்கு, கம்ப்யூட்டர் வாங்கியதில், பெரும் அளவிற்கு, முறைகேடு நடந்துள்ளது. மேலும், தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த, தன் மனைவி, ஜூவல்சி ஜவகரை, அண்ணா பல்கலையில் உள்ள, வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தில், ஆலோசகர் பதவியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும், மன்னர் ஜவகர் மீது உள்ளது.

தோல்வி அடைந்த மாணவர்கள் : விதிமுறைக்கு மாறாக, இந்த நியமனத்தை செய்து, அதன் மூலம், மனைவியை, பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். துணைவேந்தர் பதவியில் இருந்த கடைசி கால கட்டத்தில், பல்கலையில் நடந்த ஆசிரியர் நியமனம் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்ற விவகாரம் ஆகியவற்றிலும், மன்னர் ஜவகருக்கு, தொடர்பு இருக்கிறது. இவ்வாறு, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெறுவதற்கு முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதன் மூலம், அவருக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் எதுவும், உடனடியாக கிடைக்காது. விசாரணை முடிந்த பிறகே கிடைக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Click Here

தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்


ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, "ஆசிரியர் தகுதி தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண்ணில், 5 சதவீதம் தளர்த்தலாம்" என, கூறப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி, தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, மே மாதம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால், புதிய தேர்வு தேவையில்லை.
எனவே, புதிய தகுதி தேர்வு தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கருப்பையா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், தலை மை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
இறுதி விசாரணையை, நவ., 18ம் தேதிக்கு தள்ளி வைத்து, "ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனங்கள், இவ்வழக்கின் மீதான இறுதி முடிவைப் பொறுத்து அமையும்" என,"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி!

தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TET தேர்வு குளறுபடி - TRB தலைவருக்கு ரூ.5,000 அபராதம்

TET முடிவை வெளியிடலாம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் பிளட் பிரஷர்

உயர் ரத்த அழுத்தம் பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் பிரச்னை. உணவில் அதிக அளவில் உப்பைச் சேர்த்துக்கொள்பவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், மன அழுத்தத்தில் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வரும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆனால், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆய்வானது பள்ளி செல்லும் குழந்தைகள் மத்தியில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை அதிகரித்துள்ளது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது.  இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் கவிதாவிடம் பேசினோம். 

உலக அளவில் டீன் ஏஜ் பருவத்தினர் நான்கு சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளது. 1994-ம் ஆண்டில் இந்தியாவில் 4 சதவிகிதம் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது. ஆனால் அது தற்போது 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாங்கள் நடத்திய ஆய்வில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் 9.6 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும், 10.7 சதவிகிதம் மாணவ, மாணவிகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றம் மேற்கொள்வதன்மூலம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஆரம்பநிலையில் வெளியே தெரியாது. குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது தளர்ச்சி, படபடப்பு, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியலாம். ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிடில், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
புதுச்சேரியில் நாங்கள் ஆய்வு மேற்கொண்ட குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் துடிப்பற்ற வாழ்க்கை முறை காரணமாக உயர் ரத்த அழுத்தம் பிரச்னை அதிகரித்து வருவதையும் எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.
உடல் பருமன்
உடல்பருமனே உயர் ரத்த அழுத்தத்துக்கு ஆணிவேர். அரசு பள்ளி மாணவர்களில் ஐந்து சதவிகித மாணவர்கள் உடல்பருமனுடன் இருந்தனர். ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில் 20 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருந்தனர். உடல்பருமனுள்ள ஆண் மாணவர்களில் இருவரில் ஒருவருக்கும், ஒட்டுமொத்தமாக உடல்பருமனுள்ள மாணவர்களில் 35 சதவிகிதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தோம்.  உடல்பருமனுள்ள மாணவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு, சர்க்கரை நோய், மூட்டு தொடர்பான பிரச்னைகள், மூச்சுத் திணறல், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
மன அழுத்தம்
இந்த மாணவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்பட மன அழுத்தமும் மற்றொரு முக்கிய காரணம் என்று கண்டறிந்தோம். அதிலும் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு அதிக அளவில் மன அழுத்தப் பிரச்னை இருந்தது. காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும்வரை தொடர்ந்து படிப்பு, வெளியில் சென்று விளையாடாதது, துடிப்பான வாழ்க்கை முறையின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் நெருக்கடி காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இது ரத்தக் குழாய்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
படிப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தையின் உடல் நலம் பற்றி கவனிக்க மறந்துவிடுகின்றனர். இதுவே இந்த இளம்வயதில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தம் வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன்மூலம் கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் இனியாவது விழித்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறைகள்:
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம் 50 சதவிகிதம் வேறு ஒரு நோயின் தாக்கமாக இருக்கலாம். இதை செகண்டரி ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவர்.  
ரத்தக்கொதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ரீனல் ஃபங்ஷன் டெஸ்ட் மற்றும் அப்டாமினல் ஸ்கேன் செய்யவேண்டும். அது ப்ரைமரியா இல்லை செகண்டரியா என்பதைக் கண்டறிய வேண்டும். செகண்டரியாக இருந்தால், ரத்தக்கொதிப்புடன் அது தொடர்பான  நோய்க்கும் சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
பி.எம்.ஐ. பரிசோதித்து, உடல்பருமன் இருந்தால், உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க வழிசெய்யலாம்.  
மாணவர்களிடமும் ரத்தக்கொதிப்பின் அளவு வேகமாக உயர்வதை அரசு உணர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் அனைத்து பள்ளி மாணவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்பெண் முறை மாணவர்களிடம் அதிகளவு மன அழுத்ததை ஏற்படுத்துகிறது. இதை விடுத்து,percentile  மற்றும் grade pointsபோன்ற முறைகளை நடைமுறைப்படுத்தினால், மன அழுத்தமும், ரத்தக் கொதிப்பும் வெகுவாகக் குறையும்.

அலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களை பயன் படுத்தக் கூடாது - நாமக்கல் DEEO ஆணை

Wednesday 30 October 2013

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS இல் பதிவேற்றம் செய்த விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க வேண்டும். EMIS இல் அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது எனவும், இதில் ஏதேனும் தவறு இருப்பின் அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று தலைமை ஆசிரியர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என உத்தரவு இடப் பட்டுள்ளது. 

திருச்சி கருமண்டபத்தில், வாசன் மெடிக்கல் அருகில்  உள்ள i - touch computers உரிமையாளர் திருமதி.பெட்ரிசியா அவர்கள்  ஆசிரியர்களுக்காக EMIS பணிகளை குறைந்த கட்டணத்தில் செய்து தர முன்வந்துள்ளதாக தெர்வித்தார். அவரின் தொலைபேசி 97887 88469.   

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதி மொழி படிவம்

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS  உறுதி மொழி படிவம்


EMIS இல் மாணவர் விவரங்களை OFF-LINE இல் (இணையதள இணைப்பு இல்லாமல்)பதிவேற்றம் செய்தல் , திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் எப்படி? - வீடியோ விளக்கம்.


டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காலை, மாலை நில வேம்பு கசாயம்
தற்போது மழைக்காலம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் சிலர் டெங்கு காய்ச்சலாலும் பாதிப்படைந்துள்ளனர்.
இப்படி, வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவின்படி, அண்ணாநகரில் உள்ள அரசு சித்த மருத்துவ டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் தினமும் காலை மற்றும் மாலை 2 வேளைகளிலும் நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்குகின்றனர். இதனால் நோயாளிகள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புகின்றனர்.
‘எலிசா’ முறை
அலோபதி மருந்துகளை உட்கொண்டபடியே இந்த நிலவேம்பு கசாயத்தை குடிப்பதன் மூலம் மட்டுமே விரைவான நிவாரணம் பெற முடியும். நிலவேம்பில் உள்ள மருத்துவ குணமானது வைரஸ் நோய்களை எளிதில் குணமடைய செய்கிறது.
இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வே.கனகசபை கூறியதாவது:-
கடந்த ஆண்டு முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ‘எலிசா’ முறைப்படி ஆய்வு மேற்கொண்டு, ‘ஐ.ஜி.எம்.’ சோதனை மேற்கொண்டு டெங்கு நோய் கண்டறியப்படுகிறது.
பிற சோதனைகள் டெங்கு இருப்பதாக தவறான தகவல்களை அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ‘எலிசா’ சோதனையே முழுமையான சோதனையாகும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதற்கு போதுமான அளவு ரத்தம் மற்றும் பிளேட்லெட்டுகள் மருத்துவமனையில் இருப்பு உள்ளது.
இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்ற டாக்டர்கள் தான், மதுரை, நெல்லை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டபோது, அங்கு சென்று டாக்டர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். அத்தகைய சிறந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதால் டெங்குவுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்களிடையே வரவேற்பு
தற்போது மழை மற்றும் நுண் கிருமிகள் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு குறித்த சோதனை செய்ய முடியும். அவ்வாறு டெங்கு நோய் கண்டறியப்பட்ட உடனேயே அவர்களுக்கு ‘சலைன்’ என்ற நரம்பு வழியாக செலுத்தப்படும் உப்பச்சத்து நிறைந்த திராவகம் கொடுக்கப்படுவதால் டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துவிட்டது.
மேலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உத்தரவின்படி, அரசு சித்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் காலை, மாலை வேளைகளில் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள். சித்த மருந்து பக்கவிளைவு இல்லாததால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உயிர் சேதம் இல்லை
இங்கு மொத்தம் 37 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர். அதில் 8 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உள்ளது. அவர்களும் 2 அல்லது 3 நாட்களில் குணம் அடைந்து வீடு திரும்புவார்கள். கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டு டெங்கு நோயினால் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
டெங்கு நோயை பரப்பும், ஏ.டி.இ.எஸ். கொசு சுத்தமான நீரில் தான் உற்பத்தி ஆகிறது. எனவே டெங்கு பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் தேங்காய் சிரட்டை, ரப்பர் டயர் போன்றவற்றை அப்புறப்படுத்துவதுடன், வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் பாத்திரங்களை துணியினால் கட்டி வைத்து பயன்படுத்துவதுடன், தினசரி தண்ணீர் பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்து வைப்பது நல்லது.
இவ்வாறு டாக்டர் வே.கனகசபை தெரிவித்தார்.
2 பேருக்கு டெங்கு நோய்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் 37 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை டாக்டர் அமலா தெரிவித்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 8 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாகவும், 2 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 1-ந் தேதி டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனையில் நடத்த உள்ளதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன் தெரிவித்தார்.

பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர் சாவு துறையூரில் பரபரப்பு

துறையூரில் பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வீரமச்சான்பட்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் அஜித்(வயது 17). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு செல்லும் போது எலிமருந்தை(விஷம்) வாங்கிச் சென்றார். பள்ளி வளாகத்தில் வைத்து யாருக்கும் தெரியாமல் எலி மருந்தை குடித்தார்.
வகுப்பறையில் மயங்கினார்
பின்னர் வகுப்பறையை நோக்கி வேகமாக சென்றார். வகுப்பறைக்கு சென்றதும் மாணவர்கள் முன்னிலையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த அஜித்திடம் சக மாணவர்கள் கேட்டனர். அப்போது தனக்கு படிப்பு சரியாக வரவில்லை. என்னால் படிக்க முடியவில்லை என்றும் இதனால் தான் எலிமருந்தை குடித்து விட்டதாகவும் அஜித் கூறினார்.
பரிதாப சாவு
இதையடுத்து அஜித்தை உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜித் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அஜித்தின் தந்தை அண்ணாத்துரை துறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வளாகத்தில் மாணவர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

TRB தேர்வில் பிழையான வினாத்தாள்: மறுதேர்வு உத்தரவுக்கு உயர் நீதி மன்றம் தடை

மடிகணினி கிடைக்காத அரசு பள்ளி மாணவர்கள்

சத்தான உணவை உண்ண முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை

10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பு - வினா மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்

வினாத்தாள் பிழையால் தமிழாசிரியர் நியமனத்துக்கு மறு தேர்வு - தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

பிப்ரவரி 19 இல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்?

Tuesday 29 October 2013

டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.

ஆசிரியை உயிரோடு எரிப்பு: பள்ளி ஆய்வாளர் தலைமறைவு


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். 90 சதவீத தீக்காயம் அடைந்த அந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன் அந்த ஆசிரியைக்கு பள்ளியின் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டியுள்ளனர். வாபஸ் பெற மறுத்ததால் ஆசிரியை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். 

இதில் முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி ஆய்வாளர், மாவட்டக் கல்வி ஆய்வாளர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையாஇது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில

அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர்அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்லகாலம் காலமாய் நிகழ்ந்து வருவது.  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.  அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.


 அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா?   அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும்அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா?   அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்அல்லதுஅரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா?  அதுபோலவேஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்!  ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ ,ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள்அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா?  அதற்காகநாம் மக்களை குறை கூறுகிறோமா?  அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம்,   தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?  நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்;சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே?   இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?  அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும்தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை.  ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும்,   அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர்.   இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்ஒரே மாதிரி சுவைதான்;   ஆனால்ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது,  அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா?  தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல.  அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்?  ஆனால்அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல.  இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள்.   அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே!  தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும்கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா?  காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து,வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும்கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும்கழுத்து சங்கிலியையும்,   அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால்,   ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா வது அறிந்ததுண்டா?  வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில்,  அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்,  தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனரே...  அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா?  பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாதுதண்டிக்கக் கூடாதுமீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப தையாவது அறிவார்களா?  கண்ட இடங்களில் எச்சில் துப்புவது,பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது,செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது,  தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்?  அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை?   பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்?  இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில்,  எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?  பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது.   மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)- க்குள் தள்ளப்படுகின்றனர்.   அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது.   பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும்வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.  அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர்.   அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை.  ஆகவேஅரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.  அதற்குப் பதிலாகஅரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம்

விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் பி.டி.ஏ., சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெரும் வகையில் குறைந்த விலையில் வினா விடை வங்கி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதிலும் 36 மையங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வினா விடை புத்தங்கள் விற்பனை துவங்கியது. தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாவிடை புத்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., தமிழ்வழி வினா விடை புத்தகங்கள் 180 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 தமிழ் வழி வினாவிடை புத்தங்கள் 325 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 2 வினா விடை புத்தங்கள் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில், இரண்டு நாட்களில் இங்கு விற்பனை கொண்டு வரப்பட்ட ஆங்கில வினா விடை விடை புத்தங்கள் விற்பனை ஆனது.
நேற்று (அக்., 26) ஆங்கில வழி வினா விடை புத்தங்களை வாங்க வந்த மாணவ, மாணவிகள் புத்தகங்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பினர். கூடுதல் வினா விடை புத்தங்கள் கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
விடுபட்டுள்ள தாவரவியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை புத்தகங்களை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்களை பள்ளிக் கல்வித்துறை எடுக்க மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது: "தற்போது முதற்கட்டமாக பெரும்பாலான பாடங்களின் வினா, விடை புத்தங்கள் வந்துள்ளன. ஆனாலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான பாடமான தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை தற்போது விற்பனைக்கு வரவில்லை. இப்பாடங்களின் வினாவிடை புத்தங்களை மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்

கட்டணம் உயர்த்தும் பள்ளிகள் வழக்கில் மேல் முறையீடு தேவை


 அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை உயர்த்துவதற்காக சிறுபான்மையினர் பள்ளிகள் தொடரும் வழக்கு மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் கட்டண குழுவிடம் முறையிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டணக் குழு 2010ம் ஆண்டு முதல் கட்டணம் நிர்ணயித்துவருகிறது. சில பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக கமிட்டிக்கு கடந்த ஆண்டு வரை 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். கூடுதலாக பெற்ற தொகை திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சிறுபான்மையினர் பள்ளிகள் அந்த கட்டணம் போதவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவுகளை பெற்று வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒன்று திரண்டு நேற்று கட்டண கமிட்டியில் புகார் தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் அருமைநாதன் கூறியதாவது: 

 சிறுபான்மையினர் பள்ளிகள் தங்களுக்குள்ள சிறுபான்மை உரிமையின்படி, மற்ற பள்ளிகளைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். இது நியாயமற்றது. எனவே உயர்நீதி மன்ற தீர்ப்புகளை எதிர்த்து கட்டண குழு மேல் முறையீடு செய்ய வேண்டும். இது குறித்து நீதிபதி சிங்கார வேலுவை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு


கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன். 2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012, அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்«ன். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் படிப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரித்து 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என பள்ளி கல்வி செயலாளர் ஏப்ரல் 30ல் உத்தரவிட்டார். அதன் பிறகும் என்னை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவில்லை. 

ஐகோர்ட் கிளை உத்தரவை உயர்கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, உயர் கல்வி செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆசிரியர்கள்மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
தீபாவளி 2-ந்தேதி (சனிக்கிழமை) வருகிறது. அன்று பெரும்பாலும் வெடி, பட்டாசு வெடிப்பவர்கள் சிறுவர்கள், வாலிபர்கள்தான் அதிகம். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள்தான்.
எனவே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.
சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:-
பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்
*பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது
* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.
*பட்டாசுக்களை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.
* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.
* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
*பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
பெற்றோர் முன்னிலையில்...
*பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.
*விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம்.
தினம் தோறும் செய்து காண்பியுங்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.