Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 29 October 2013

ஆசிரியை உயிரோடு எரிப்பு: பள்ளி ஆய்வாளர் தலைமறைவு


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். 90 சதவீத தீக்காயம் அடைந்த அந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன் அந்த ஆசிரியைக்கு பள்ளியின் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டியுள்ளனர். வாபஸ் பெற மறுத்ததால் ஆசிரியை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். 

இதில் முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி ஆய்வாளர், மாவட்டக் கல்வி ஆய்வாளர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment