Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 27 October 2013

வேலூர் அரசு பள்ளியில் மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் ஹயாத்பாஷா. இவரது மகன் இம்ரான்பாஷா(வயது 13). கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் இம்ரான்பாஷா மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தாமதமாக பள்ளிக்கு வந்தான். இதை பார்த்த பள்ளி ஆசிரியர் உலகநிதி கண்டித்தார். அப்போது அவர், மாணவனை பிரம்பால் அடித்ததாகவும், இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக மாணவனை அவரது பெற்றோர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆசிரியர் உலகநிதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கும் போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment