Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 29 October 2013

கட்டணம் உயர்த்தும் பள்ளிகள் வழக்கில் மேல் முறையீடு தேவை


 அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை உயர்த்துவதற்காக சிறுபான்மையினர் பள்ளிகள் தொடரும் வழக்கு மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் கட்டண குழுவிடம் முறையிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டணக் குழு 2010ம் ஆண்டு முதல் கட்டணம் நிர்ணயித்துவருகிறது. சில பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக கமிட்டிக்கு கடந்த ஆண்டு வரை 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். கூடுதலாக பெற்ற தொகை திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சிறுபான்மையினர் பள்ளிகள் அந்த கட்டணம் போதவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவுகளை பெற்று வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒன்று திரண்டு நேற்று கட்டண கமிட்டியில் புகார் தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் அருமைநாதன் கூறியதாவது: 

 சிறுபான்மையினர் பள்ளிகள் தங்களுக்குள்ள சிறுபான்மை உரிமையின்படி, மற்ற பள்ளிகளைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். இது நியாயமற்றது. எனவே உயர்நீதி மன்ற தீர்ப்புகளை எதிர்த்து கட்டண குழு மேல் முறையீடு செய்ய வேண்டும். இது குறித்து நீதிபதி சிங்கார வேலுவை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment