Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 31 October 2013

டிச.1ல் குரூப்,2 எழுத்து தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்


குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் தேதி நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் காலியாக உள்ள 1064 அரசு பணிகளில் புதிய அலுவலர்களை நியமிக்க குரூப் 2 தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே தேதி அறிவித்தது. முதல் நிலை எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குரூப் 2 தேர்வு நடக்கும் நாளான டிசம்பர் 1ம் தேதி, வேறு சில துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் நடக்க உள்ளது என்றும், அதனால் குரூப்2 க்கான முதல் நிலைத் தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என்று குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகயை தேர்வாணையம் பரிசீலித்தது. குரூப் 2 தேர்வு எழுத 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வுகள் நடக்க இருப்பதால் குரூப் 2 தேர்வை விரைந்து முடித்து முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. அதனால் தேர்வாணையம் அறிவித்தபடி டிசம்பர் 1ம் தேதியே குரூப் 2 தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment