Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 30 October 2013

பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர் சாவு துறையூரில் பரபரப்பு

துறையூரில் பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வீரமச்சான்பட்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் அஜித்(வயது 17). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு செல்லும் போது எலிமருந்தை(விஷம்) வாங்கிச் சென்றார். பள்ளி வளாகத்தில் வைத்து யாருக்கும் தெரியாமல் எலி மருந்தை குடித்தார்.
வகுப்பறையில் மயங்கினார்
பின்னர் வகுப்பறையை நோக்கி வேகமாக சென்றார். வகுப்பறைக்கு சென்றதும் மாணவர்கள் முன்னிலையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த அஜித்திடம் சக மாணவர்கள் கேட்டனர். அப்போது தனக்கு படிப்பு சரியாக வரவில்லை. என்னால் படிக்க முடியவில்லை என்றும் இதனால் தான் எலிமருந்தை குடித்து விட்டதாகவும் அஜித் கூறினார்.
பரிதாப சாவு
இதையடுத்து அஜித்தை உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜித் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அஜித்தின் தந்தை அண்ணாத்துரை துறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வளாகத்தில் மாணவர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment