Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 28 March 2014

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு தமிழ் இரண்டாம் தாள் 777 பேர் ஆப்சென்ட்


திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத 777 பேர் வரவில்லை.
2013-14ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வு நேற்று முன் தினம் துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 781 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இரண்டாம் நாளான நேற்று, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத திருச்சி மாவட்டத்தில் 399 பள்ளிகளில் பயிலும், 20,552 மாணவர்கள், 19,892 மாணவிகள் என மொத்தம் 40,444 பேரும், தனித் தேர்வர்கள் 1,369 என மொத்தம் 41,813 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் 137 தேர்வு மையம், தனித் தேர்வர்களுக்கு 13 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில், 150 பேர் கொண்ட பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பத்தவர்களில் 41, 036 பேர் தேர்வு எழுதினர். 777 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருச்சி மத்திய சிறையில் 64 கைதிகள் நேற்று தேர்வு எழுதினர். அடுத்து ஆங்கிலம் முதல் தாள் தேர்வு ஏப்ரல், 1ம் தேதி நடக்கிறது. 

No comments:

Post a Comment