Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 29 March 2014

பள்ளிகளில் இப்படியும் பாகுபாடு ‘டல்’ மாணவர்கள், இனி தனித்தேர்வர்கள்! தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க... விபரீத ஐடியா


பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக, சுமாராகப் படிக்கும் மாணவர்களை, பொதுத்தேர்வு எழுத விடாமல், தனி தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் நடவடிக்கையில் சில பள்ளிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7 ஆயிரத்து 281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8.26 லட்சம் பள்ளி மாணவர்களும், 53 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஏப். 9ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 10 லட்சத்து 39 ஆயிரம் பள்ளி மாணவர்களும், 75 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
சரியாக படிக்காத மாணவர்களை பொதுத்தேர்விற்கு சில மாதங்களுக்கு முன் பள்ளிகளில் இருந்து நீக்குவது அல்லது பள்ளியில் படித்தாலும் தேர்வெழுத அனுமதிக்காமல் பொதுத்தேர்வு முடிந்தவுடன் வரும் உடனடித்தேர்வில் எழுதலாம் என பெற்றோரிடம் எழுதி வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சில பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. இப்படிச் செய்வதால், பொதுத்தேர்வின் போது பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
உடனடி தேர்வின் போது, அதில் பங்கேற்கும் மாணவர்கள் தனி தேர்வர்களாகவே கணக்கிடப்படுவர். பொதுத்தேர்வின் போது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமாராக படிக்கும் மாணவர்களை தனி தேர்வர்களாக தேர்வு எழுத வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ‘டல்’ மாணவர்களை ஓரம் கட்டும் செயல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இம்முறை இந்தச் சம்பவங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூறுகையில், ‘பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்ப்பதில்லை. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கின்றனர். படிப்பில் எவ்வளவு சுமாராக இருந்தாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் அந்த மாணவர்களை கண்டிப்பாக சேர்த்தாக வேண்டும். அதே நேரம் தேர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்கவேண் டும் என கல்வித்துறை அழுத்தம் கொடுக்கிறது. ஆசிரியர்களால் முன்புபோல் மாணவர்களை கண்டித்து படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதால் இதுபோல் சம்பவங்கள் நடக்க தொடங்கியுள்ளன. மதிப்பெண் கணக்கீடு, தேர்ச்சி விகிதம் என தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுவதே இதற்கு காரணம் என்றனர்.

No comments:

Post a Comment