Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 28 March 2014

மறதி நோயால் மாணவர்கள் பாதிப்பு கூடுதல் நேரம் ஒதுக்கி உத்தரவு


தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 9ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 69 மையங்களில், 27 ஆயிரத்து, 606 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், ஆறு இடங்களில், பத்து வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 20 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதிட, 26 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவ, மாணவிகளில், தேர்வுக்கு முன்னதாகவே, டிஸ்லெக்சியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்னர். அவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment