Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 24 October 2013

ஆசிரியர்கள் பற்றாக்குறை: ஆன்லைன் கல்வியை நாடும் பொறியியல் மாணவர்கள்

தமிழ்நாட்டில் 535 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி துறை தெரிவித்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தரம் உயரும் என்று உறுதியாக கூற முடியாது.
பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களின் பாற்றக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. எனவே மாணவர்கள் சரியான கல்வியை பெற முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள, சமீப காலமாக ஆன்லைன் பொறியியல் கல்வியை நாடி வருகின்றனர். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தங்களது கற்பித்தல், கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த (MOOCs)திறந்த ஆன்லைன் முறையை நாடி செல்கின்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஐஐடி.,யின்-என்பிடிஇல், எம்ஐடி போன்ற தளங்களில் அந்தந்த துறை நிபுணரிடம் இலவசமாக பாட விளக்கங்களை கற்று கொள்ள இந்த முறை உபயோகமாக இருக்கும் என்று கோரப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக, காளான் போன்று ஆங்காங்கே பொறியில் கல்லூரிகள் அதிகரித்துள்ளது. ஆனால் ஏஐசிடிஇ அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களை நியமிக்காதது வேதனைக்குறிய ஒள்றாகும்.

No comments:

Post a Comment