Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 13 May 2014

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வழங்கினார்.

                                         

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வழங்கினார்.
பிளஸ்-2 தேர்வு

திருச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 1,100 மதிப்பெண்கள் மற்றும்1,050 க்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
100 சதவீத தேர்ச்சி
இந்த நிகழ்ச்சியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கொளக்குடி, மூவானூர், கல்லகம், அய்யம்பாளையம், கீழ அன்பில், வாயையூர், திருச்செந்துறை அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், புத்தூர் பார்வையற்றோர் அரசு பள்ளி, பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 38 பேருக்கு கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார், மாவட்ட கல்வி அதிகாரிகள் செல்வராஜ் (முசிறி), தண்டாயுதபாணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment