Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 18 July 2014

கவுன்சலிங் குழப்பத்திற்கு தீர்வு: நீதி கேட்டு ஐகோர்ட் படியேறிய ஆசிரியைக்கு இடமாறுதல்


மதுரையை சேர்ந்த ஆசிரியை சங்கீதா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட் டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன் மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. அதனால், வேறொருவரை அந்த பணியிடத்துக்கு மாற்றிவிட்டனர். 

என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பா லை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி நாகமுத்து நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, வக்கீல்கள் போராட்டம் காரணமாக ஆசிரியை சங்கீதாவே நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி முன் முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகி, ஆசிரியை சங்கீதாவை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை நீதிபதியிடம் அளித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை நீதிபதி முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment