Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 20 July 2014

பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு


மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகள் உள்ளன.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த தொடக்க பள்ளிகளில், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடி பெயர்தல், ஆங்கில மோகம் ஆகியவற்றால், பட்டதாரிகளை உருவாக்கிய தொடக்க பள்ளிகளில் பலவற்றில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில், மாணவர்களே வராத நிலையில், பல பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நடைமுறையில் இருந்தாலும், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளிலும் 2 ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். 50 மாணவர்கள் உள்ள பள்ளியிலும், இதே போன்று இரண்டுஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் ஒருவர் விடுமுறை எடுத்தால், மற்றவர் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு எடுக்க வேண்டியது உள்ளது. இதனால், விடுமுறையின்றி பணியாற்றும் நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து, இயங்கி வரும் தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் என்ற அடிப்படையில் இல்லாமல், பள்ளியின் செயல்பாடு, மாணவர்களின் வருகையை கணக்கில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.தொடக்க பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: ஒரு சில தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை அதிக அளவில் சேர்த்து வருகிறோம். 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், 3 ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதுவரை இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இதனால், ஒருவர் எதிர்பாராத விதமாக விடுப்பு எடுத்தாலும், மற்றவர் அனைத்து மாணவர்களையும் கவனிக்க வேண்டியது உள்ளது. எனவே, இந்த விகிதாச்சாரத்தை மாற்ற வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment