Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 30 May 2014

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு - சீருடை 2ம் தேதி முதல் கிடைக்கும்

பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி முதல் புத்தகம், நோட்டு, சீருடைகள் உள்ளிட்ட அனைத்து இலவச பொருட்களையும் வழங்க வேண்டுமென மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் 14 வகை பொருட்களில் பெரும்பாலானவற்றை வழங்கிட மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 2ல், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு சீருடை, 10ம் வகுப்பு வரை நோட்டுக்கள், செருப்பு, பேக், பஸ் பாஸ் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள புத்தக இருப்பு மையங்களில் இருந்து, பள்ளிகளுக்கு இலவச புத்தகம், நோட்டு உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இணை இயக்குநர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment