Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 29 November 2013

இருபத்து ஐந்துக்கும் குறைவான குழந்தைகள் உள்ள சத்துணவு மையங் களை மூடும் நடவடிக்கை யைக் கண்டித்து கரூரில் உண்ணாவிரதம்


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு உண்ணா விரதம் இருந்தனர்.

இருபத்து ஐந்துக்கும் குறைவான குழந்தைகள் உள்ள சத்துணவு மையங் களை மூடும் நடவடிக்கை யைக் கண்டித்தும், பணிக் காலத்தில் இறந்த ஊழியர் களின் வாரிசுகளுக்கு உட னடியாக பணி வழங்க வேண்டும்; ஒட்டுமொத்த ஓய்வூதியம், சிறப்பு சேமநல நிதியை பணி ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த உண்ணா விரதம் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வேம்புசாமி தலைமை வகித்தார்.

மாவட் டக்குழு உறுப்பினர் பழனி வரவேற்றுப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.சுப்பிர மணியன் போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகேசன் சிறப்புரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.பெரியசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.மகாவிஷ்ணன், பொருளாளர் பொன்.ஜெய ராம் உள்ளிட்டோர் கோரிக் கைகளை ஆதரித்துப் பேசி னர். சங்க மாவட்ட நிர்வாகி கள் பிச்சைகாரன், கௌதமி, சிவகாமி, சுசிலா, இராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்டப் பொருளா ளர் மாலதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment