Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 25 December 2013

ஒன்றாம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு மற்றும் சேர்க்கை கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மந்தவெளிபாக்கத்தைச் சேர்ந்தவர், விஜய் ஸ்ரீனிவாசலு. அவர், தன் மகன் ஷரிஷா விஜயை, கடந்த ஆண்டு, மந்தை வெளியில் உள்ள தனியார் பள்ளியில், சேர்க்கை கட்டணம், 39,700 ரூபாய்; நன்கொடை, 50 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 89,700 ரூபாய் செலுத்தி, முதல் வகுப்பில் சேர்த்தார். பள்ளி துவங்கும் நேரத்தில், விஜய் ஸ்ரீனி வாசலு, வெளிநாடு செல்ல வேண்டியதாயிற்று. இதனால், மகனுக்கு செலுத்திய கல்வி தொகையை, பள்ளி நிர்வாகத்திடம் திருப்பி கேட்டார். பள்ளி நிர்வாகம் தர மறுத்தது. இதுகுறித்து, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில், விஜய் ஸ்ரீனிவாசலு முறையிட்டார். வழக்கை விசாரித்த, நுகர்வோர் கோர்ட் தலைவர் கோபால், உறுப்பினர் தீனதயாளன் ஆகியோர், மாணவரின் தந்தையிடம் பெற்ற, 89,700 ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும். அவருக்கு, இழப் பீடாக, 25 ஆயிரமும், மன உளச்சலுக்காக, 5 ஆயிரமும் சேர்ந்து, 30 ஆயிரத்தை பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.


கடலூர் மாவட்டத்தில், பெண் கல்வியில், பின்தங்கிய மூன்று ஒன்றியங்களில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, புதிதாக விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி உட்பட 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. எந்தெந்த ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், பயிலும் மாணவிகள், கல்வியில் பின் தங்கியுள்ளனர் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
அதில், மங்களூர், நல்லூர், பண்ருட்டி உள்ளிட்ட மூன்று ஒன்றியங்களில், பெண்கள், கல்வியில் மிகவும் பின் தங்கியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த மூன்று ஒன்றியங்களிலும் பெண்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவிகள் மட்டும் தங்கி படிக்க வசதியாக புதிதாக விடுதி ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்," பெண் கல்வியில் மிகவும் பின் தங்கிய இந்த மூன்று ஒன்றியங்களிலும் புதிதாக விடுதி வசதி ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மூன்று அரசு பள்ளி வளாகங்களில் இடம் தேர்வாகியுள்ளது. ஒவ்வொரு விடுதிக்கும் தேவையான கட்டுமானப் பணிகளுக்காக தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக, இரண்டு கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி வந்துள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
இப்பணிகள் முடியும் வரை மாணவிகள் தற்காலிகமாக தங்க இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பயிலும் பெற்றோரை இழந்த மாணவிகளுக்கும், கஸ்தூர்பா காந்தி பால வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கும் விடுதியில் தங்கி படிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இதேப் போன்று, தந்தை அல்லது தாயை இழந்த, புலம் பெயர்ந்த, பள்ளியில் இடைநின்ற மாணவிகளும் சேர்ந்து படிக்கலாம். ஒரு விடுதியில் 100 பேர், மட்டுமே தங்க அனுமதி உண்டு' என்றார்.

No comments:

Post a Comment