Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 25 December 2013

மாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு!


வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

÷தமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.

÷கோவை மாவட்டம், வால்பாறை அருகிலுள்ள மானாம்பள்ளி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

÷இந்நிலையில் போதிய மாணவர் வருகை இல்லாததால் பள்ளியை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த மாதம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

÷அதேபோல வால்பாறையில் உள்ள ஹை பாரஸ்ட் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி நிர்வாகம் அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளியைத் தொடர்ந்து நடத்திட உறுதி அளித்துள்ளதாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment