Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 31 December 2013

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தனிஅதிகாரி பணிநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தனிஅதிகாரியாக பணியில் சேர்ந்த செந்தில்குமார் (26) என்பவரது பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் கடந்த 2004-2008ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்டிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ போலி சான்றிதழை கொடுத்து திருவண்ணாமலை படிப்பு மையத்தில் தனி அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்கள் உறுதித்தன்மை சான்று பெறும் பணியில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கண்ட செந்தில்குமாரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்ததை அடுத்து பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்து, பணி நீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment