Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 28 August 2014

ஓராண்டு இழுபறிக்கு பின்னர் தமிழகத்தில் 1656 இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் ரிலீஸ்!


தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு
1,656 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒராண்டு இழுபறிக்கு பின்னர் தேர்வு பட்டியல் வெளியானதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இடை நிலை ஆசிரியர் பணிக்கு 23.08.2010க்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு இரண்டு முறை தகுதித் தேர்வு நடந்த போதிலும் இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடம் பூர்த்தி செய்யப்படவில்லை. 2013ம் ஆண்டுக்கான தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆக.17ம் தேதி நடத்தப்பட்டது.

இதறகான முடிவுகள் வெளியாகி, சான்று சரி பார்ப்பு முடி ந்த போதி லும் வழக்குகள் கார ண மாக ஆசிரியர் நியமனம் இழுபறியாக இருந்தது. தகுதித் தேர்வு முடிந்து ஓராண்டு நிறைவு பெற்று விட்ட நிலையில் ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்து இடைநிலை ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 2 ஆயிரத்து 584 இடைநிலை ஆசிரியர்கள் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 21ம் தேதி அறிவித் தது.தொடக்க கல்வித் துறையில் நிரப்பப்படாமல் இருந்த பின்னடவு காலி பணியிடங்கள் 845, தற்போ தைய பணியிடங்கள் 830. சிறுபான் மை மொழி ஆசிரியர்கள் பின்னடைவு காலியிடங்கள் & 102. சிறுபான்மை மொழி தற் போதைய காலியிடங்கள் & 72. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 64. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் காலியிடங்கள் & 669 என மொத்தம் 2 ஆயிரத்து 584 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதில் முதல் கட்டமாக தொடக்க கல்வித் துறையில் 1675 பணியிடங்களுக்கு 1656 பேர் கொண்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில்
(www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை தொடக்க கல்வித் துறையின் மூலம் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. எஞசியுள்ள 19 பணியிடங்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் தகுதியானவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1656 இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாக ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment