Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 15 August 2014

தேசியக்கொடி ஏற்ற ஒத்துழைக்காத பள்ளி தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே அரசு பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற ஒத்துழைக்காத, அப்பள்ளி தலைமை ஆசிரியரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நீலவேணி 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். எஸ்.புதூர் ஒன்றியம், தருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வமணி,45. மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது, அலுவலக ஆவணங்களை வழங்கி, ஒத்துழைப்பு தராதது, கடந்த ஆக.,15ல் ஊராட்சி தலைவர், பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற ஒத்துழைக்க மறுத்தது; அந்த ஊரில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாக இருந்தது; அரசின் நலத் திட்டங்களை சரியாக வழங்காதது, என, இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில், செல்வமணியை, 'சஸ்பெண்ட்' செய்து சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நீலவேணி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். எஸ்.புதூர் ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலரிடம் இந்த உத்தரவு குறித்து கேட்க முயன்ற போது, தனது மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

No comments:

Post a Comment