நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 21 மாணவிகள், 16 மாணவர்கள் உட்பட 37 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 100% தேர்ச்சி பெற்றனர்.2009ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் பிளஸ் 2வில் இயற்பியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 பாட பிரிவுகளுக்கு மட்டுமே முதுகலை ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். மற்ற பாடங்களுக்கு 10ம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வெளியில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்தினர். 3 பாட பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையிலும், மாணவ, மாணவிகள் தாங்களே முயற்சி செய்து படித்து 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment