Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 19 May 2014

சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டில் 100% மாணவர் சேர்க்கை கட்டாயம்


ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத நலிவடைந்த பிரிவு மாணவ மாணவியர் சேர்க்கை 100 சதவீதம் நடைபெற்றுள்ளது என்பதை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
* ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியிலும் எல்கேஜி, முதல் வகுப்பு, 6ம் வகுப்பு ஆகியவற்றில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். அதன் அடிப்படையில் 25% இடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.
* வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்றாலும் அந்த பள்ளிகளிலும் நுழைவுநிலை வகுப்புகள் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை விபரங்களை சேகரித்து இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment