Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 14 November 2013

இரட்டைப்பட்டம் வழக்கு 25.11.2013 அன்று தொடரும்....


இன்று சென்னை உயர்நீதிமன்றம் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் பிரகாஷ் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் வாதிட்டனர். அதன் பின் அரசு வழக்குரைஞர் தன் வாதத்தை தொடர்ந்தார். இரட்டைப்பட்டம் சார்பாக வழக்குரைஞர்களின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அரசு தரப்பு தன் வாதத்தை வருகிற 25.11.2013 திங்கள் கிழமை தொடர உள்ளது. அன்று மூன்று வருட பட்டப்படிப்பு சார்பாக வழக்கறிஞர்கள் வாதாட உள்ளனர். அதன் பின்பே தீர்ப்பு வெளி வரும். ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
தகவல் பகிர்வு: தோழர் கலியமூர்த்தி@சென்னை உயர்நீதி மன்றம்.

No comments:

Post a Comment