"தமிழகத்தில், 3.7 கோடி பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளன,'' என, ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்தின், துணை இயக்குனர், திருமால் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: நாடு முழுவதும், 52 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தினமும், 10 லட்சம் பேருக்கு, அட்டைகள் தயாராகின்றன. தமிழகத்தில் உள்ள, 7.2 கோடி மக்கள் தொகையில், 5 வயதுக்கு மேலான, 6.75 கோடி பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 4.5 கோடி பேருக்கு படம் எடுக்கப்பட்டுள்ளது. 3.7 கோடி பேருக்கு, அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இது, 51 சதவீதமாகும். மதுரையை பொறுத்தவரை, 30 லட்சம் பேரில், 19.45 லட்சம் பேர், ஆதார் அட்டைகள் பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதில், விடுபட்டவர்கள், அதற்கான மையங்களுக்கு சென்று, படிவம் பூர்த்தி செய்து கொடுத்து, பதிவு செய்யலாம். ஆதார் அட்டை பதிவுக்கு நிரந்தர மையம் ஏற்படுத்த, மாநில அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கார்டுகள் குறித்த நிலை, திருத்தம் உட்பட, அனைத்து விவரங்களையும் பெற, மொபைல் போனில், 51969 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி தகவல் பெறலாம். இவ்வாறு, திருமால் கூறினார்.
No comments:
Post a Comment