Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 February 2014

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான ஆசிரியர் சரண்

வாணியம்பாடியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தலைமறைவாக இருந்த கணித ஆசிரியர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி புதூரில் அரசு நிதியுதவி பெறும், கண்கார்ட்டியா பள்ளியில், 1,200 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த கோபி, அந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த, ஜனவரி, 28ம் தேதி, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியர், ஐந்து பேரை தன் வீட்டுக்கு அழைத்து சென்று, ஆபாச, "சிடி'க்களை பார்க்க வைத்து, பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, மாணவிகளின் பெற்றோர், வாணியம்பாடி டவுன் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார், தலைமறைவான ஆசிரியர் கோபியை தேடி வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், கணித ஆசிரியர் கோபி சரண் அடைந்தார். அவரை, 15 நாள் காவலில் அடைக்க, நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில், சில்மிஷ ஆசிரியர் கோபி அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment