Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 28 February 2014

பள்ளி மாணவி தீக்குளிப்பு : பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை

திருவொற்றியூரை சேர்ந்த முனியாண்டி மகள் பவித்ரா (14). விம்கோ நகர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த 25ம் தேதி தீக்குளித்துவிட்டார். உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பவித்ராவின் முகத்தில் ஆசிரியை துப்பியதால், அவமானத்தில் தீக்குளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உறவினர்கள் நேற்று காலை பள்ளிக்கு சென்று, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இதையடுத்து பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியை, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment