Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 12 May 2014

ஆசிரியர் குறைதீர் முகாமில் கலந்து கொள்ளும் பொருட்டு வரும் கல்வியாண்டில் அனைத்து முதல் சனிக்கிழமைகளிலும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு மாதத்தின் முதல் சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டில் முதல் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் வரும் கல்வியாண்டு முதல், முதல் சனிக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,
அதை உடனடியாக நாட்காட்டி தயாரிக்கும் உதவியாளரிடம் உடனடியாக தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஆங்கில வழிக் கல்வியை நிதியுதவி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
கடவுச் சீட்டு பெறுவதற்கான அனுமதி நியமன அலுவலருக்கு வழங்கியதை போல், வீட்டு கட்ட முன்பணம் பெறுவதற்கான அனுமதியை நியமன அலுவலரே வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்கான வழிகள் செய்யப்படும் என இயக்குநர் தெரிவித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment