Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 13 September 2014

தமிழக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்


தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக தமிழ்மொழி திறனை சோதிக்கும் வகையிலான புதுமை கேள்விகளை கேட்பது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த விரிவுரையாளர்கள் மூலம் ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில் சேரும் மாணவர்கள், புத்தாக்க பயிற்சிக்கு வரும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் பாட ஆசிரியர்களுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ் மொழியில் புதுமையான கேள்விகளை தயாரிப்பது தொடர்பாக விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்மொழி வினாத்தாள்களில் இலக்கியம் சார்ந்த கருத்துகளை சோதிக்கும் கேள்விகளே அதிகம் இடம் பெறுகின்றன. 

பேசுதல், எழுதுதல் ஆகிய மொழித்திறன்களை சோதிக்கும் வகையிலான கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற வேண்டும். அந்த மொழி அறிவு திறனை மாணவர்களிடம் எப்படி வளர்க்கலாம் என்பது குறித்தும், இத்திறன் சரியான கேள்விகளை வடிவமைப்பது தொடர்பாகவும் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இப்போது தமிழ் மொழி வினாத்தாளில் மாற்றம் செய்வதற்கான பயிற்சியும் அளித்துவருகிறது. விரைவில் பிற பாடங்களுக்கும் அந்தந்த துறை நிபுணர்களை கொண்டு வினாத்தாள் மாற்றுவதற்கான கருத்தரங்கம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment