Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 22 September 2014

கசப்புணர்வினை அதிகரித்துவிடக்கூடாது!

ஆனந்த விகடனில் திரு.பாரதி தம்பி எழுப்பியுள்ள விவாதம் நல்லதொரு திசைவழியில் பயணிக்கவேண்டும். மாறாக கசப்புணர்வினை அதிகரித்துவிடக்கூடாது.
1990 களில் அமலாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தினை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று மாற்றியமைக்க காரணமாக இருந்தது. இதே வேளையில் பன்னாட்டு கம்பெனிகளும் இந்தியாவை நோக்கி படையெடுத்துள்ளன. இந்த கம்பெனிகளில் வேலை வேண்டுமானால் எந்த விலைகொடுத்து சான்றிதழ் பெறுகிறோமோ அதற்கேற்ற வேலை என்ற அளவில் கல்வி வியாபாரமாகியுள்ளது. மேலும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் பலரும் உயர்கல்வி தாய்மொழியில் வளராதது குறித்து பெரிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது போல அரசுப்பள்ளி ஆசிரிய எண்ணிக்கையைக் குறைத்து அரசுப் பள்ளிகள் நம்பிக்கையற்றதாகும் அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் சிறந்த கட்டமைப்பு போன்ற தோற்றமும், ஒரிருவர் நுனி நாக்கில் பேசும் ஆங்கிலமும் உலகமய உலகில் பாமரனாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் கவர்வதில் வியப்பில்லை. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு அருகாமைப்பள்ளி. யார் எங்கே வசிக்கிறோமோ அங்கேதான் கல்வி பெற உரிமையுடையவர்கள் என்று கொண்டுவரலாம். ஆனால் இன்றைய சுயநலமிக்க லாபநோக்குள்ள உலகில் எத்தனை பேர் இதனை ஆதரிக்க முன்வருவர்?. ஆசிரியர்களை சகட்டு மேனிக்கு விமரிசிப்பதோடு அரசின் கொள்கைகள் குறித்தும் விமர்சனங்கள் வரவேண்டும். அதுவே நடுநிலையோடு இப்பிரச்சனையை அணுக உதவும். இதுபோன்ற ஒருசார்பு விவாதங்கள் ஆங்காங்கே குறைவான எண்ணிக்கையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்துவதாக அமையாது அவர்களையும் செயல்படாதவர்களாக மாற்றிவிடும்

No comments:

Post a Comment