பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கும் நாள் 18ம் தேதி என்று தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளன. மேற்கண்ட தேர்வுகளை ஏற்கெனவே எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் தனி தேர்வர்களாக இந்த ஆண்டு தேர்வில் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்தது. இந்நிலையில் 15ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் தனி தேர்வர்கள் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment